ஆந்திராவில் இருந்து கோலிவுட் சினிமாவிற்கு வந்தவர் அங்காடி நடிகை. வந்த வேகத்திலேயே கிடுகிடுவென வளர்ந்த இவர் சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஐதராபாத்தில் மறைமுகமானார்.
அப்போது இந்த நடிகை எங்கே இருக்கிறார் என்று எல்லோரும் கூகுளில் தேடினார்கள். பிறகு நான் இங்கே தான் இருக்கிறேன் என்று ஒரு அறிக்கை விட்டார்.
இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் அங்காடி நடிகைக்கும், இசை குடும்பத்து வாரிசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது தான். கடைசியாக சென்னை வந்து வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த அவர் தற்போது ஜெயமான நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அங்காடி நடிகை சமீபத்தில் தனது தோழிகளுடன் ஐதராபாத்தில் உள்ள பப் ஒன்றுக்கு சென்றுள்ளார். பப்பில் மூக்கு முட்ட முட்ட குடித்துள்ளார். அப்போது அவரை யாரோ ஒரு வாலிபர் தெரியாமல் மோத நடிகை கடுப்பாகிவிட்டார்.
இதையடுத்து நடிகை குடிபோதையில் அந்த நபருடன் சண்டை போட்டுள்ளார். போலீஸார் வந்து விலக்கிவிடும் அளவுக்கு சண்டை பெரிதாகியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தார்களா என்ற விவரம் தெரியவில்லை.

No comments:
Post a Comment