காமெடி கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.
1965-ல் வெளியான வெண்ணிற ஆடை என்ற படத்தில் அறிமுகமானதால் இவரை எல்லோரும் வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைத்து வருவதாக கூறப்படுகிறது.
இவர், சினிமாவோ, சின்னத்திரையோ எதுவாக இருந்தாலும் பத்து வார்த்தை பேசினால் அதில் ஐந்து வார்த்தை இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்களாக பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் அதை அவர் காமெடியாக பேசுவதால் அதை யாரும் அசிங்கமாக நினைக்காமல் சிரித்துக்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், அவருடன் நடிக்கும் நடிகர் நடிகைகளோ அவர் திரையில் பேசுவது ஒரு பத்து சதவீதம்தான். ஆனால், திரைக்குப்பின்னால் அவர் பேசுவதை காது கொடுத்தே கேட்க முடியவில்லையாம். அந்த அளவுக்கு சாதாரணமாக பேசும்போதுகூட அதில் ஆபாசம் கலந்துதான் பேசுகிறாராம்.
குறிப்பாக, படப்பிடிப்பு தளங்களில் தனது அருகே யாராவது ஆபாச நடிகைகள் சிக்கிவிட்டால், அவர்களை ஆபாச வார்த்தைகளால் வழிய வழிய பேசி ஒரு வழி பண்ணி விடுகிறாராம். அதனால் பெரும்பாலும் படப்பிடிப்பு தளங்களில் அவரது தலையைக்கண்டாலே நடிகைகள் தெறித்து ஓடிவிடுவதாக சொல்கிறார்கள்.

No comments:
Post a Comment