நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை தல ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
ஷாலினி அஜித் இன்று காலை 4:30 மணி அளவில் சென்னை தனியார் மருத்துவமனையில், ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். தாயும், சேயும், நலமாக இருப்பதாகவும், உறவினர்களும், நண்பர்களும் குழந்தையைக் காண வந்து செல்வதாகவும், செய்தியாளர் பல்லவி இன்று காலையே படத்துடன் தன் டுவிட்டர் மூலம் வெளியிட்டார்.
நடிகர் அஜித் மற்றும் ஷலினி, 1999ம் ஆண்டு அமர்க்களம் படப்பின் போது காதலில் விழுந்தனர். இருவரும் 2000மாவது ஆண்டில் மணமுடித்தனர்.
அவர்களுக்கு 2008ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அனௌஷ்கா என்ற இந்த பெண் குழந்தையை அடுத்து சில மாதங்களுக்கு முன் மீண்டும் கர்ப்பமானார்.
தற்போது, நல்லபடியாக ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். இந்த செய்தியை கேட்ட அஜித் ரசிகர்கள், தங்களுக்கு குட்டித் தல கிடைத்து விட்டார் என்று வாட்ஸாப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
No comments:
Post a Comment