Friday, 27 February 2015

அப்படி செய்தால் சும்மா விடமாட்டேன் ரோஜா எச்சரிக்கை!!


நடிகை ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். அப்பகுதியில், தெலுங்கு தேசக் கட்சியினர், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு சலுகை செய்து வருவதாக் குறிப்பிட்டு, அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் நடிகை ரோஜா.
நகரி நகர சபைக் கூட்டத்தில், ரோஜா பேசியதாவது:
”ஆட்சி என்பது வந்து போகக்கூடியது. ஆந்திராவில் நேற்று காங்கிரஸ் ஆட்சி இருந்தது. இன்று தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. நாளை எங்கள் கட்சி ஆட்சி வரலாம்.
ஆனால் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் நிரந்தரமானவர்கள். அவர்கள் எந்த ஆட்சிக்கும் அடி பணியாமல் நியாயமாக செயலாற்ற வேண்டும். தகுதி இருந்தும் சிலருக்கு அரசு சலுகை கிடைக்கவில்லை.
ஆனால் தகுதியே இல்லாதவர்களுக்கு தெலுங்கு தேச தலைவர்கள் சொன்னார்கள் என்பதற்காக சலுகை வழங்குகிறார்கள். தேர்தல் நேரத்தில்தான் நான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் காரி.
ஆனால் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த பிறகு அனைத்து மக்களுக்கு பொதுவானவர். அனைத்து கட்சியினரையும் என் தொகுதி மக்களாகவே பார்க்கிறேன்.
ஆனால் இங்குள்ள சில அரசு அதிகாரிகள் தெலுங்கு தேசம் கட்சியினருக்கு சாதகமாக நடக்கிறார்கள். இதனை பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்.
இதனை அவர்களுக்கு தான் எச்சரிக்கையாக சொல்கிறேன். நீங்கள் ஓய்வு பெறும் வரை மக்களுக்கு நியாயமாக செய்யப்பட வேண்டும்.

விமலோட ”அஞ்சல” மச்சான் இது...!


‘டீ’ கடைகள் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பதில் ஒரு சிறப்பிடத்தை பிடித்துள்ளது. சென்னை கோட்டை முதல் டெல்லி செங்கோட்டை வரை ‘டீ’ கடைகள் தலைப்பு செய்திகளாய் திகழ்ந்து வருகிறது.
முழுக்க முழுக்க ‘டீ’ கடையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் ‘ அஞ்சல’. இயக்குனர்கள் ரத்ன குமார், மூர்த்தி மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த தங்கம் சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் படமாக்கபட்டுள்ளது. Yamaha ஷோரூம் வைக்கும் லட்சியத்துடன் உழைக்கும் மெக்கானிக்காக விமல், கல்லூரி மாணவியாக நந்திதா நடிக்கிறார்கள். பசுபதி ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் இமான் அண்ணாச்சி, ஆடுகளம்’ முருகதாஸ், சுப்பு பஞ்சு இவர்களுடன் ‘டீ’ கடை மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. அனைவரையும் கவரும் ஒரு நகைச்சுவை கலந்த காதல் பொழுது போக்கு பாடமாக வருகிறது ‘ அஞ்சல’.
தனது ஃபார்மர்’ஸ் மாஸ்டர் ப்ளான் புரோடக்ஷன் சார்பில் திலிப் சுப்புராயன் இப்படத்தை தயாரிக்கிறார். " ஒரு நாள் தற்செயலாக ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனிடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே இப்படத்தை தானே தயாரிக்க முன் வந்தார்.
திலிப் சுப்புராயன் பிரபல சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.” “சூப்பர் சுப்புராயன் சண்டை பயிற்சியினை மேற்கொள்ள ஒளிப்பதிவாளர்கள் KV குகன் மற்றும் சௌந்தர்ராஜன் அவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய , பிரவின்.K.L படத்தொகுப்பை கையாள,M.G.முருகன் கலை இயக்கத்தை கவனிக்க, வெற்றி படங்களான உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேஸ் திரைப்படங்களுக்கு இசையமைத்த கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இவரது இசை படத்துக்கு பெரிய பலம். ‘அஞ்சல’ திரைப்படத்தின் இசை அனைவரையும் கவரும். நம் வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கவிருக்கும் அன்றாட நிகழ்வுகளின் கோர்வையே அஞ்சல’. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறினார் அறிமுக இயக்குனர் தங்கம் சரவணன்.

66 பந்தில் 162 ரன்கள் விளாசி சாதனை படைத்த de villiers…!


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் விளாசி புதிய சாதனைகள் படைத்ததுடன், உலகக் கோப்பையில் தனது தென் ஆப்பிரிக்க அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்ற வரலாற்றுப் பதிவுக்கும் வித்திட்டார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸ்சில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் குவித்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 409 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இபோட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் களமிறங்கிய ரூசோ - டிவில்லியர்ஸ் இணை மிகச் சிறப்பாக விளையாடியது. ரூசோ 61 ரன்களில் ஆட்டமிழக்க, டிவில்லியர்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 பந்துகளில் 162 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் உலகக் கோப்பையில் 52 பந்துகளில் சதத்தை எட்டி, இரண்டாவது அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை டிவில்லியர்ஸ் தன்வசப்படுத்தினார். 50 பந்துகளில் சதத்தை எட்டிய கெவின் ஓ பிரையனிடம் முதல் அதிவேக சதம் என்ற சாதனை உள்ளது. அதேவேளையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக ஒன்றரை சதம் (150 ரன்கள்) என்ற சாதனையை டிவில்லியர்ஸ் படைத்துள்ளார்.
டிவில்லியர்ஸ்சின் விளாசல் துணையுடன், தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் என்ற புதிய சரித்திரத்தை இன்று தொட்டுள்ளது. 2007-ல் பெர்முடா அணிக்கு எதிராக இந்திய அணி 413 குவித்ததே இதுவரை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கோடியா? ரெண்டு கோடியா?.. சல்மான் கானால் 200 கோடி நஷ்டமாம்..?


பாலிவுட் நடிகரான சல்மான் கானால் தயாரிப்பாளர்களுக்கு சுமார் 200 கோடிவரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான்கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
மானை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2007-ம் ஆண்டு ராஜஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது சல்மான் கான் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், இதற்காக வைத்திருந்த லைசன்ஸ் காலாவதியானதாகவும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சமீபத்தில் இந்த வழக்கிற்கு ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால் அந்த தீர்ப்பை வரும் மார்ச் 3ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். ஜவ்வாக இழுந்துக்கொண்டிருக்கும் இந்த வழக்கு சல்மான் கானுக்கு எதிராக முடிந்தால் பாலிவுட் திரையுலகிற்கு 200 கோடி வரை நஷ்டம் ஏற்ப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
சல்மான் கான் தற்போது பஜ்ரங்கி பைஜான், பிரேம் ரத்தன் தான் பாயோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒருவேலை சல்மான் கானுக்கு எதிராக வழக்கு முடிந்து அவர் சிறைக்கு சென்றால் இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு 150 கோடி வரை நஷ்டம் ஏற்படுமாம். அதுமட்டுமல்லாமல் சல்மான் கான் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்காக கையெழுத்து போட்டிருக்கிறாராம். இதனால் இந்தப் படத்திற்கும் 50 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

அஜித் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன இயக்குநர்கள்..!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதுவும் ஒரு சில ரசிகர்கள் இது அஜித் படம் இல்லை கெளதம் மேனன் படம் தான் என்று சொன்னார்கள். காரணம் அஜித்துக்கான ஸ்டைல் படத்தில் மிஸ்ஸிங்க் என்று கூறினார்கள்.
ஆனாலும் படம் நல்ல வசூலை குவித்தாக பட தரப்பில் சொல்லப்பட்டது. பொதுவாகவே அஜித் எப்போதும் தன் படத்தின் திரைக்கதை பணியில் தலையிட மாட்டார் என்று இயக்குநர் கூறுவார்கள். படத்தின் கதையை கேட்பதோடு சரி, மற்ற அனைத்து வேலைகளையும் இயக்குநர் பார்வையிலேயே விட்டு விடுவார். சமீபத்தில் கெளதம் மேனன் கூட அதையேதான் சொன்னார்.
ஆனால், சில நாட்களாக தனக்கு முழுக்கதையை சொன்னால் தான் படத்தின் படப்பிடிப்பிற்கு வருவேன் என்று கூறியுள்ளாராம் அஜித். ஏனென்றால் முன்பு தான் இவர் கதை கேட்காமல் நடித்த பல படங்கள் ரசிகர்களை ஏமாற்றியது.
இதனால், இனி ரசிகர்களை ஒரு போதும் ஏமாற்ற கூடாது என்று, முழு கதையையும் தனக்கு சொன்ன பிறகு தான் ஷுட்டிங் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம். இதற்கு முன்பு அஜித்தை வைத்து தாங்கள் நினைத்ததை சுதந்திரமாக எடுத்த இயக்குநர்கள் அஜித் போட்ட கண்டிஷனால் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.

Thursday, 26 February 2015

அளவுக்கு அதிகமாக வியர்ப்பது நல்லதா??


வியர்ப்பது நல்லதுதான் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் அளவுக்கு அதிகமாக வியர்த்தால்?? அதுவும் குண்டாக இருப்பவர்களுக்கு அதிகளவில் வியர்க்கும். இது நல்லதா??
நிச்சயம் நல்லதுதான். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக வியர்க்கின்றதோ அந்தளவிற்கு நல்லதாம். பலர் அந்த வியர்வையைக் கட்டுப்படுத்த நிறைய முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால், வியர்ப்பதால் உடல் எடை குறையுமாம். வியர்வை அதிகம் வந்தால், உடல் பருமனானது குறையும். அதுமட்டுமின்றி, வியர்வை வெளியேறுவதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. எனவே, அதிகம் வியர்த்தால், சற்று வியர்க்க வழிவிடுங்கள்.
ஆனால், தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் வியர்வை அதிகம் வெளியேறினால், உடலின் நீர்ச்சத்தானது குறைந்துவிடும்.
இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் வியர்ப்பதினால் ஏற்படும் நன்மைகளைக் காணலாம்…
பொலிவான சருமம் வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால், நன்கு வியர்க்கவிடுங்கள். ஏனெனில் வியர்க்கும் போது சருமத்துளைகளானது விரிவடைந்து, அதன் வழியே வியர்வை வெளியேறுவதால், சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது.
வியர்வை அதிகம் வெளியேறினால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது ஊக்குவிக்கப்படும். அதனால் தான் காய்ச்சலின் போது வியர்த்தால், காய்ச்சலானது குணமாகிவிடுகிறது.
உடற்பயிற்சியின் போது வெளிவரும் வியர்வையானது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அதிலும் வாக்கிங் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சி செய்தால், இதயமானது வேகமாக இரத்தத்தை அழுத்துவதால், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருந்து, உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, உடல் எடை குறைய வழிவகுக்கிறது.
தினமும் தொடர்ந்து செய்து வந்தால், சிறுநீரகமானது சீராக செயல்பட்டு, சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், அதிக அளவில் தண்ணீர் மற்றும் இதர பானங்களான இளநீரை குடிக்க தோன்றுவதே காரணமாகும். இதனால் தான் சிறுநீரகத்தில் நச்சுக்கள் தங்காமல் வெளியேறிவிடுகிறதாம்.
மேலும், ஆய்வு ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது நன்கு வியர்வையானது வெளியேறினால், மன அழுத்தம், சோர்வு போன்றவை நீங்கி, மனநிலையானது புத்துணர்ச்சி அடைவதாக சொல்கிறது. இதற்கு காரணம் உடற்பயிற்சியின் போது மூளையில் உள்ள கெமிக்கல்களானது ஊக்குவிக்கப்பட்டு, ஒருவரின் மனதை சந்தோஷமாகவும், ரிலாக்ஸாகவும் வைக்க உதவுகிறது.

இரயில்வே பட்ஜெட்: ஜெ., மோடி ஒருபக்கம் - கருணாநிதி, காங்கிரஸ் மறுபக்கம்!!


இன்று இந்தியாவின் சமூக வலைதளங்களில், பரபரப்பாக பேசப்பட்டு வருவது ரயில்வே பட்ஜெட்.
இந்த ரயில்வே பட்ஜடில் ரயில் கட்டணம் உயர்வு இடம்பெற வில்லை என்றாலும், சிறப்பம்சங்கள் அனைத்தும் வழக்கமான ஒன்றாகவே இருந்தது பலருக்கு அதிருப்தியையே கொடுத்துள்ளது.
எதிர்பார்ப்புகளுடன் இருந்த மக்களுக்கு, இந்த ரயில்வே பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்து இருக்கிறது என்பது எதிர்கட்சிகளின் கருத்து.
தமிழகத்தின் முன்னாள் தலைவர்கள் உட்பட சிலர் இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வைகோ, கருணாநிதி, விஜயகாந்த் உள்ளிட்ட பலர் எதிர்பும் தெரிவித்துள்ளனர்.
இரயில்வே பட்ஜட் குறித்து அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்.
யாரையும் பாதிக்கவில்லை: பிரதமர் மோடி
2015 ரயில்வே பட்ஜெட் முற்போக்கு பார்வை கொண்டது. எதிர்காலத்தையும், பயணிகளையும் மையமாகக் கொண்டது. சாதிப்பதற்கான தெளிவான கண்ணோட்டத்தையும், உறுதியான திட்டத்தையும் கொண்டது.
முதன்முறையாக ரயில்வே துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
பணம் எங்கிருந்து வரும் - காங்கிரஸ்
புதுமையை புகுத்தும் சுரேஷ் பிரபுவின் சிந்தனையை மதிக்கிறேன். இது சராசரிக்கும் குறைவான பட்ஜெட். ரயில்வே துறையை நவீனமயமாக்க அதிக முதலீடு தேவை.
அதற்கான பணம் எங்கிருந்து வரும் என்று பிரபு தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க., வாய்ப்பு தவறவிட்டது – கெஜ்ரிவால்
ரயிலை அதிகமாகப் பயன்படுத்தும் பாமர மக்களுக்கு தேவையான கட்டண குறைப்பு இடம்பெறவில்லை. சிறப்பம்சங்கள் யாவும் இரயிலில் குறைவாகப் பயணிக்கும் மேல் தட்டு மக்களுக்கு சாதகமாகவே இருக்கிறது.
ஊழல் அகற்றல் குறித்த திட்டங்கள் எதுவும் இடம்பெற வில்லை. கிடப்பில் கிடக்கும் திட்டங்கள் சரிசெய்ய வழி செய்யவில்லை. அந்நிய முதலீடுகள் குறித்து தெளிவாக விவரிக்கவில்லை.
முக்கியமாக புதிய ரயில்கள் இயக்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. எனவே பட்ஜெட் மொத்தமாக, ரயிலை அதிகம் பயன்படுத்தும் நடுத்தர மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த ரயில்வே பட்ஜெட்டினை எதிர்கால வளர்ச்சிகளை எதிர்நோக்கி வடிவமைத்திருக்க வாய்ப்புகள் இருந்தும் அதை தவறவிட்டுவிட்டது.
இது வெறும் காணல் நீர் – வைகோ
ரயில்வே துறையின் மூலம் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்தல், இரயில் நிலையங்களைத் தூய்மைப்படுத்துதல், பசுமைக் கழிவறைகள் ஏற்படுத்துதல், பெண் பயணிகள் பாதுகாப்பு, முக்கிய இரயில் நிலையங்களில் வைஃபை வசதி, குறைந்த விலையில் தரமான குடிநீர் விற்பனை போன்றவை அனைத்தும் கடந்த இரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்று இருந்தன.
ஆனால், நடைமுறைக்கு வரவில்லை. மொத்தத்தில் ரயில்வே பட்ஜெட், காகித அறிவிப்பாகவும், கானல் நீராகவும் காட்சி அளிக்கின்றது விஜயகாந்த்
விஜயகாந்த் வரவேற்பு
மத்திய அரசின் 2015-2016 நிதி ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட மாட்டது என்பதும், ஏழை மக்களின் பயணத்திற்கு ஏதுவாக பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது, பெண்கள் பாதுகாப்பிற்காக, ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படுவது, முன்பதிவு கால அவகாசத்தை 120 நாட்களாக நீடித்ததும், பயணிகள் வசதிக்காக 67% கூடுதல் நிதி ஒதுக்கியது, பெட்டிகளின் உள்ளே நவீன மாற்றங்கள் செய்வது ஆகியன வரவேற்கத்தக்கவை.
நாடு முழுவதும் 96 ஆயிரம் கோடி மதிப்பில் 77 திட்டங்கள் விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, சர்வே முடிந்த நிலையில் சென்னை-ஸ்ரீபெரும்பதூர், மதுரை-கோட்டயம் உள்ளிட்ட சுமார் 24 திட்டங்கள் கைவிடப்பட உள்ளதாகவும், பணி நடந்து வரும் நிலையில் சென்னை-கடலூர், பழனி-ஈரோடு உள்ளிட்ட சுமார் 9 திட்டங்கள் கைவிடப்பட உள்ளதாகவும் பல்வேறு செய்திகள் வருகின்றன.
இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இத்திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
எந்த வகையிலும் வரவேற்க முடியாதது - கருணாநிதி
வரவேற்க முடியாது இந்திய ரெயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே இந்த முறை தான் முதல் தடவையாக புதிய ரெயில்களோ, கூடுதல் ரெயில்களோ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஈரோடு - பழனி ரெயில் திட்டம் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கி, இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டும் என்றும் நான் விடுத்த அறிக்கையிலே கேட்டுக்கொண்டிருந்தேன்.
ஆனால் மத்திய ரெயில்வே மந்திரி மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் புதிய ரெயில்களை அறிவிக்க முடியாத சூழ்நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்று அறிவித்திருப்பதால், பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைவார்கள்.
புதிய திட்டங்களை அறிவிக்காததோடு பல திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளன. எனவே, எந்த வகையிலும் வரவேற்க முடியாத பட்ஜெட்டாகவே மத்திய அரசின் ரெயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது. காங்கிரஸ் புதுமையை புகுத்தும் சுரேஷ் பிரபுவின் சிந்தனையை மதிக்கிறேன்.
இது சராசரிக்கும் குறைவான பட்ஜெட். ரயில்வே துறையை நவீனமயமாக்க அதிக முதலீடு தேவை. அதற்கான பணம் எங்கிருந்து வரும் என்று பிரபு தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
வரவேற்கத்தக்கது - ஜெயலலிதா
எந்த வகையிலும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாதது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையான நடவடிக்கை மூலம் ரயில்வே துறையை மேம்படுத்த திட்டமிட்டி ருப்பது வரவேற்கத்தக்கது.
பயணி கள், குறிப்பாக பெண் பயணிகள் பாதுகாப்பு, ரயில்கள் மற்றும் ரயில் நிலையத் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக் கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.
புதிதாக திட்டமிடப்பட்டுள்ள வைர நாற்கர அதிவேக ரயில் இணைப்பு திட்டத்தின் வழித்தடங் களில் சென்னைக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். புதிய ரயில் திட்டங்கள், முன்பு அறிவிக்கப்பட்டு நிதி இல்லாததால் செயல்படுத்தப்படாமல் இருக்கும் திட்டங்கள் குறித்து எதுவும் கூறப் படவில்லை.
தமிழகத்தில் மட்டும் 22 ரயில் திட்டங்கள் இதுபோன்று நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. புதிய ரயில்கள் குறித்து அறிவிக்கும்போது, இந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன். பறக்கும் ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்தை இணைக்கும் திட்டம் குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும் என நம்புகிறேன்.
வழக்கமாக ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகள் மிகவும் எதிர்பார்க் கப்படும். அதுபோன்ற அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக் கிறது.