Saturday 20 June 2015

8000 மைல் விமான சக்கரத்தில் பயணித்தவர்களில் ஒருவர் பலி!!!

பிரிட்டனுக்கு சொந்தமான விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் ஒளிந்து பயணம் செய்த இருவரில் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்க தலைநகர் ஜொகன்னர்ஸ்பேர்க்கில் கடந்த புதன்கிழமை மாலையில் புறப்பட்ட போயிங் 747-ரக விமானம் சுமார் 11 மணி நேரத்துக்கு மேலாகப் பயணம் செய்து ஹீத்ரோ விமான நிலையத்தையை சென்றடைந்தது. இந்நிலையில் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ரிஷ்மன்ட் நகரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் மீது ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இவர் ஜொகன்னர்ஸ்பேர்க்கில் இருந்து ஹீத்ரோ சென்ற விமானத்தின், சக்கரப் பகுதியில் ஒளிந்து இருந்து பயணம் செய்தபோது விழுந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே விமானத்தின் சக்கரப் பகுதியில் பயணம் செய்த மற்றொரு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விமானம் ஜொகன்னர்ஸ்பேர்க்கில் புறப்படுவதற்கு முன்னதாகவே சக்கரம் இடையூறு ஏற்படுத்திவிடாத வண்ணம் இருவரும் உள்ளே சென்று பாதுகாப்பாக இருந்துள்ளனர். விமானம் புறப்பட்டு சென்று லண்டன் அடையும் வரையிலும் இருவரும் பாதுகாப்பாக இருந்து உள்ளனர்.
ஜொகன்னர்ஸ்பேர்க்கில் இருந்து புறப்பட்டு சுமார் 11 மணிநேரத்திற்கு மேலாக, சுமார் 8 ஆயிரம் மைல் தூரம் இருவரும் விமானத்தின் சக்கரத்திற்கு உள்ளே உள்ள பகுதியில் இருந்து பயணம் செய்துள்ளனர். விமானம், ரிஷ்மன்ட் நகரில் பயணம் செய்தபோது குறித்த நபர்கள் சுமார் ஆயிரத்து 400 அடி உயரத்தில் பயணம் செய்துள்ளனர் என விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்காட்லாந்து போலீஸார்  கூறுகையில், ‘18ஆம் தேதி காலை 9:35 மணியளவில் ரிஷ்மன்ட் நகரில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
மரணத்திற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே உண்மை தெரியவரும். இதேவேளை குறித்த நபரின் உயிரிழப்புக்குக் காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறன. இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றனர்.
ஏற்கனவே இது போன்று இரண்டு மூன்று சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment