Saturday 20 June 2015

எனக்கு த்ரிஷா சிஸ்டர் மாதிரி ஹன்சிகா ஓபன் டாக்..!!

பெரும்பாலும், ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாயகிகள் நடிக்கிறார்கள் என்றால் அந்த படத்தில் கண்டிப்பாக பிரச்சினை இருக்கும் என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத ஒன்று. ஒரு நாயகிக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும், மற்றொரு நாயகிக்கு முக்கியத்துவம் இருக்காது என்பதாலேயே இதுமாதிரி பிரச்சினைகள் எழுவதுண்டு.
இதில், ஒரே படத்தில் முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள் என்றால், சொல்லவா வேண்டும். கண்டிப்பாக அங்கு பிரச்சினை இல்லாமல் இருக்காது. ஆனால், இதிலிருந்து மாறுபட்டு இருக்கிறார்கள் திரிஷாவும், ஹன்சிகாவும். ஆம், இவர்கள் இருவரும் தற்போது சுந்தர்.சி. இயக்கும் ‘அரண்மனை-2’ படத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் முதல் பாகத்தில் ஹன்சிகா நடித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தில் இவருடன் திரிஷா இணைந்துள்ளார். ஹன்சிகா, இரண்டு பாகத்திலும் ஹீரோயினாக நடிப்பதால் திரிஷாவைவிட ஹன்சிகாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் என்று கூறப்பட்டது. இதனால், திரிஷாவுக்கு ஹன்சிகா மீது சற்று வருத்தம் எனவும் கூறப்பட்டது.
ஆனால், அதை ஹன்சிகா மறுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறும்போது, எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. நல்ல சகோதரிகளாகத்தான் பழகுகிறோம் என்று கூறியுள்ளார்.
‘அரண்மனை-2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

No comments:

Post a Comment