Thursday, 4 June 2015

உங்க உடம்பில் ஏன் ‘கப்’ அடிக்குது என்று தெரியுமா??


சிலரின் பக்கத்தில் செல்லவே முடியாது அந்த அளவிற்கு உடலில் கெட்ட வாடை அடிக்கும். இன்னும் சிலர் 5 அடி தூரத்தில் நடந்து வந்தாலே உடலில் நாற்றம் வீசும்.
அதனை கட்டுப்படுத்த என்னென்னமோ முயற்சிகள் எடுப்பார்கள், அது இன்னும் மோசமாகி விடும். வாசனை திரவியங்கள் சேர்ந்து இன்னும் மோசமான வாடையை ஏற்படுத்தும்.
இதனை மறைக்க நினைப்பவர்கள் இது ஏன் ஏற்படுகிறது என்று யோசித்து பார்ப்பதே இல்லை. உங்கள் உடலில் ஏன் துர்நாற்றம் வீசுகிறது என்று பார்க்கலாம்.


கார்போஹைட்ரேட் உணவுப் பொருட்களை தவிர்த்தால், அது உடலில் இருந்து கெட்ட துர்நாற்றத்தை வீசும். மேலும் ஆய்வு ஒன்றின் படி உணவில் புரோட்டீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருந்தால், அதனால் உடலில் இருந்து கீட்டோன்கள் வெளியேற்றப்பட்டு, இதனால் உடல் துர்நாற்றத்தை மட்டுமின்றி, சிறுநீர் துர்நாற்றமும் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
வியர்வையிலேயே பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் மோசமான துர்நாற்றத்தை வெளிப்படுத்துவது மன அழுத்தத்தினால் வெளிவரும் வியர்வை தான். ஏனெனில் இந்த வியர்வையானது புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களுடன் சேர்ந்து அபோகிரைன் என்னும் சுரப்பியில் இருந்து சுரக்கும்.
மாட்டிறைச்சியை உட்கொண்டால், அது செரிமானமாவது தாமதமாவதோடு, அதனால் கெட்ட துர்நாற்றம் உடலில் இருந்து வாயு வெளியேறும் போது மோசமான நாற்றத்துடன் வெளிவருகிறது. அதுமட்டுமின்றி, மாட்டிறைச்சியில் உள்ள அமினோ ஆசிட், சருமத்தில் உள்ள பாக்டீரியாவுடன் சேரும் போது, அது கெட்ட துர்நாற்றத்தை வீசும்.
காப்ஃபைன் மற்றும் ஆல்கஹால் இவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தாலும், உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகமாக வீசும்.
நீரிழிவு நோயுள்ளவர்களின் உடலில் இன்சுலின் குறைபாடு இருப்பதால், எரிபொருளாக கொழுப்புக்கள் உடைக்கப்படுகிறது. இப்படி உடைக்கும் போது அவை கீட்டோன்களாக மாறி, உடலில் கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
மலச்சிக்கல் தீவிரமான நிலையில், உடலில் இருந்து துர்நாற்றம் வீசும். இதற்கு உடலில் இருந்து டாக்ஸின்கள் முறையாக செரிமான மண்டலத்தின் வழியே வெளியேற்றப்படாமல் இருப்பதால், அவை சருமத்துளைகளின் வழியே வெளியேறும் போது, துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment