காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மேக்னா ராஜ். அப்போது இவருடைய நடிப்பும், அழகும் பெரிதும் பேசப்பட்டது. நயன்தாரா சாயலில் இருப்பதால் அடுத்த நயன்தாரா என்றெல்லாம் கூறப்பட்டது.
இதனால் தமிழ் சினிமாவில் நயன்தாராவை போன்று ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவருக்கு ஏற்றப்படி வாயுப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் தமிழில் ஒன்றிரெண்டு படங்களில் நடித்துவிட்டு மலையாள கரையோரம் ஒதுங்கினார்.
தற்போதுகூட தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் மலையாளம், கன்னடம் படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் பட வாய்ப்புகள் வருவது மந்தமாகவே உள்ளது. இதற்கு முன்பு கவர்ச்சி காட்சிகளில் அளவோடுதான் நடிப்பேன் என்று கண்டிஷன்போட்டு வந்தார். இது அவருக்கு மைனஸாக அமைந்தது.
அதனால் தற்போது கவர்ச்சியாக நடிக்க முடிவு எடுத்துவிட்டார். அதுவும் கிளு கிளு காட்சி என்றாலும் ஓகேவாம். நடிகை சீமா மலையாளத்தில் நடித்த ‘அவளோட ராவுகள்’ பரபரப்பாக பேசப்பட்ட கிளு கிளு படம். அப்படம் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் தான் கிளு கிளுப்பாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாம் மேக்னா. அதுவும் குறைந்த சம்பளத்திற்கு.
No comments:
Post a Comment