'கத்தி படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது சோனாஷி சின்ஹாவை வைத்து அகிரா என்ற இந்திப் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை எ.ஆர்.முருகதாஸ் இயக்கப்போவதாகவும் இப்படத்தை ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் ஒரு தகவல் சமீபத்தில் அடிபட்டது. ஆனால் இதனை ஆஸ்கார் ரவிச்சந்திரன் மறுத்ததாகவும் கேள்வி.
இந்நிலையில் அகிரா படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் முருகதாஸ் பாலிவுட் பாஷாவான ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.
இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்திற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையா.. வதந்தியா... என்று சம்மந்தப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும்..

No comments:
Post a Comment