நீண்டகாலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு தெனாலிராமன் படம் மூலம் ரீ-என்டரி ஆனார்.
இப்படம் வெற்றிப்பெரும் என்று எதிர்பார்த்தவருக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் அடுத்தபடியாக வடிவேலுவை வைத்து படம் இயக்க எந்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் முனவரவில்லை. அப்படியே வந்தாலும் கொஞ்சம் யோசித்தார்கள்.
இந்த நிலையில் தான் மீண்டும் மனம் தளராமல், தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளனே வடிவேலுவை வைத்து இயக்க முன் வந்தார். எலி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ஒரு எலியின் குணாதிசயங்களைக் கொண்டவராக வடிவேலு நடிக்கிறாராம். 70-களில் நடப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 'ஜெயம்', 'அந்நியன்', 'உன்னாலே உன்னாலே' ஆகிய படங்களில் நடித்த நடிகை சதா நடிக்கவருகிறார். இது குறித்து இயக்குநர் யுவராஜ் கூறுகையில் "சதா ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேற்கொண்ட வேறு எதுவும் இப்போதைக்குக் கூற முடியாது.
அடுத்த வாரம் முதல் அவர் படப்பிடிப்பில் இணையவுள்ளார்" என கூறினார். மேலும் படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த இரண்டு மாதங்களில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து வெளியாகத் தயாராகிவிடும் என்றும் அவர்கூறியுள்ளார்.

No comments:
Post a Comment