Wednesday, 4 March 2015

”உங்கள அவங்களோட கம்பேர் பன்ன முடியாது” நீதிபதி நெத்தியடி!!


கடந்த 2012ம் ஆண்டு, மத்திய அரசு, நாடக நடிகர்கள் மற்றும் கிராமியக் கலைஞர்களின் சேவை வரிகளுக்கு விலக்கு அளித்தது அறிக்கை விடுத்தது.
இந்த வரி விலக்கில், சினிமா நடிகர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றுக் கோரி நடிகர் சித்தார்த், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை கொடுத்தார்.
இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
‘மத்திய அரசின் அறிவிக்கை பாரபட்சமாக இருக்கிறது. சேவை வரி விலக்கு சினிமா நடிகர்களுக்கு பொருந்தவில்லை. இது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. எனவே, இந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்’
இந்த மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது நடந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ”நாடக நடிகர்களின் திறனுடன் சினிமா நடிகர்களை இணைத்துப் பார்க்க முடியாது. பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை ஊக்குவிப்பதற்காக சேவை வரியில் இருந்து கிராமியக் கலைஞர்கள், நாடக நடிகர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது."
"கிராமியக் கலைஞர்கள், நாடக நடிகர்கள் பெரும் நிதிச் சிக்கலில் இருக்கிறார்கள். சினிமா நடிகர்கள் அதுபோல இல்லை. எனவே, தகுதி இல்லாத இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்.” என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment