Tuesday, 3 March 2015

நீதிபதி மகளை கரம் பிடிக்கும் அருள்நிதி..!


பாண்டிராஜ் இயக்கிய ‘வம்சம்’ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் அருள்நிதி.
இந்தப் படத்தை தொடர்ந்து 'மௌனகுரு, உதயன், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். இதில் மெளனகுரு படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. தற்போது இவருடைய நடிப்பில் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘டிமான்டி காலனி’ ஆகிய படங்கள் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் அருள்நிதிக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. நேற்று மாலை அருள்நிதியின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.
அருள்நிதி மணக்கப் போகிறவரின் பெயர் கீர்த்தனா. இவர் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மகள். நேற்று நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் இரு குடும்பத்தினரின் உற்ற உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment