உலகக் கோப்பையில் ஒரு அணி அடிக்கும் அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. தற்ப்போது குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் நடுவேயான போட்டி பெர்த் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
இதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கன் கேப்டன் முகமது நபி, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியுள்ளது. இது உலக கோப்பை தொடரில் ஒரு அணி அடிக்கும் அதிகபட்ச ஸ்கோராகும்.
முன்னதாக, இந்தியா படைத்திருந்த 413 ரன்கள் என்ற சாதனையை தற்ப்போது ஆஸ்திரேலியா தன்வசமாக்கிக் கொண்டது.
சாதனைகள்:
2015 - ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான், 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள்
2007 - இந்தியா-பெர்முடா, 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள்
2015 தென் ஆப்பிரிக்கா-அயர்லாந்து, 4 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள்
2015 - தென் ஆப்பிரிக்கா- மேற்கிந்திய தீவுகள், 5 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள்
1996 – இலங்கை-கென்யா, 5 விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள்.

No comments:
Post a Comment