நாளுக்கு நாள் லிங்கா பிரச்சினை வளர்ந்துக்கொண்டே போகிறது. இதற்கு என்னதான் தீர்வு என்று இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் தான் ஒரு அதிர்ச்சி தகவல்வெளிவந்துள்ளது. அதாவது லிங்கா பிரச்சினைக்கு பின்னால் நடிகர் விஜய் இருக்கிறார் என்பதுதான்.
ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு ரிலீஸான படம் ’லிங்கா’.இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துவிட்டது என்று படதரப்பில் கூறினாலும், இப்படத்தால் நாங்கள் நஷ்டம் அடைந்து விட்டோம் என ஒவ்வொரு நாளும் போராட்டங்கள், நடத்தி வருகின்றனர் விநியோகஸ்தர்கள்.
இப்பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் லிங்கா' விநியோகஸ்தர்கள் தரப்பில் வைக்கப்பட்டிருந்த நஷ்ட ஈடு கோரிக்கைக்கு, தன்னால் 10% மட்டுமே தரமுடியும் என்று கூறினார். எனினும் அது போதாது என்றும், ரஜினி இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் பிச்சையெடுக்கும் போராட்டத்தை நடத்த போவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறினர்.
விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து வைக்கப்பட்ட பத்திரிக்கையாளார் சந்திப்பில், "ரஜினியை நஷ்ட ஈடு கொடுக்காதீர்கள். நீங்கள் கொடுத்தால் நாங்களும் கொடுக்க வேண்டும். நீங்கள் நஷ்டத்திற்கு பணம் கொடுத்து பழகி விட்டீர்கள், எனவே தான் உங்களின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் நெருக்கடி தருகிறார்கள்.
மேலும் இதே நிலை தொடர்ந்தால் மற்ற நடிகர்களும் பாதிக்கப்படுவோம். ரஜினியே கொடுத்து விட்டார் நீங்கள் தாருங்கள் என கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று இரண்டு நடிகர்கள் தடுக்கிறார்கள்" என கூறினார்கள். அந்த நடிகர்கள் யார் என்று கேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டார்கள். ஆனால் கோடம்பாக்கத்து வட்டாரத்தில் இந்த கேள்வியை முன் வைத்தவர்கள் சரத்குமார், இன்னொருவர் விஜய் என கிசுகிசுக்கப்படுகிறது.
இது குறித்து விஜய் தரப்பிடம் கேட்டபோதுபோது, "விஜய் தற்போது 'புலி' படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அவரை இழுத்தால் பிரச்சினை பெரிதாக ஆகிவிடும் என்று நினைக்கிறார்கள். விஜய் எப்போதுமே யாருடைய பிரச்சினையிலும் தலையிட மாட்டார். விஜய்க்கும், 'லிங்கா' விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமில்லை" என்று தரப்பினர்.

No comments:
Post a Comment