தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்தை ஒரு பக்கம் பா.ஜ.க., திட்டித் தீர்த்துக் கொண்டு இருக்கிறது. காரணம், நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், கூட்டணி கட்சி என்ற முறையில், பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக கையைக் கூடக் காட்ட வில்லை.
இதையே பிடித்துக் கொண்ட பா.ஜ.க., தேர்தலில் தோற்றதுக்கு இதுவும் ஒரு காரணம் என்றுச் சொல்லிக் கொண்டு வருகிறது. இந்நிலையில், நீதிமன்றத்தில் கொஞ்சம் அவகாசம் கொடுங்க என்று கேட்டதற்கு விஜயகாந்துக்கு நீதிபதி அபராதம் விதித்துள்ளார்.
விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்ட 12 பேர் மீது, தமிழக அரசு அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றிக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் கேட்டுள்ளார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், சரி மாற்றிக்கோங்க என்று சொல்லி, அதற்கு டைமும் கொடுத்துள்ளது.
இந்த கால அவகாசம் முழுவதும் முடிந்த போதும், நம்ம கேப்டன் வழக்கை மாற்றுவதற்கான முயற்சிகளை சரியாக எடுக்க வில்லை போல. அதற்குள்ளாக அடுத்த விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த விசாரணியில், வழக்கை மாற்றுவதற்கு மேலும் கொஞ்சம் அவகாசம் கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதை கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்கு, வழக்கு ஒன்றுக்கு 2000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.
அதோடு, சீக்கிரம் வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அந்த மனுவையும் தள்ளுபடி செய்து விடுவேன், என்றும் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment