தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய வளர்ச்சியை பற்றி சொல்ல தேவையில்லை.
தற்போது இருக்கும் ஹீரோக்களில் தயாரிப்பாளர்களுக்கு பிடித்த ஹீரோ இவர் தான். காரணம் இவரை நம்பி எவ்வளவு போட்டாலும் அசூலுக்கு மோசம் இல்லாமல் திரும்பி கிடைத்துவிடும் என்பதுதான். இவருடைய நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் காக்கிசட்டை.
இதற்காக தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றிற்காக பேட்டியளித்த சிவகார்த்திகேயனிடம், நீங்கள் சம்பள விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கிறீர்கள் என்று ஒரு தகவல் வெளியாகிறதே? என்று கேட்டதற்கு, ‘காக்கிச்சட்டை’ படத்துக்கு என்ன சம்பளம் என்றே எனக்குத் தெரியவில்லை.
இதுவரை தனுஷ் சம்பளம் என்று எதுவும் தரவும் இல்லை, அதைப் பற்றிச் பேசவும் இல்லை. அவர் எப்போது கொடுக்கிறாரோ அப்போதுதான் எனக்கே எவ்வளவுனு தெரியும் என்று கூறினார்.
மேலும் தற்போது நடித்து வரும் ‘ரஜினிமுருகன்’ படத்துக்கு பிறகு நான் நடிக்கவிருக்கும் புதிய படங்களுக்கு என் ஊதியம் என்ன என்பதில் நான் நிச்சயமாக டிமாண்ட் பண்ணும் எண்ணத்துடன் இருக்கிறேன். நானும் செட்டில் ஆகணுமே” என்று ஆதங்கத்துடன் கூறினார்.

No comments:
Post a Comment