‘கத்தி’ படத்திற்கு பிறகு சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். ‘புலி’ என்று தலைப்பு வைத்திருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர். ஸ்ரீதேவி , ‘நான் ஈ’ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இதுவரை இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவல்களின்படி விஜய் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சரித்திர கால திரைப்படமாக உருவாகிவரும் இதில் விஜய், தளபதி மற்றும் கார்ட்டூனிஸ்ட் என இரு வேறு தோற்றங்களில் நடிக்கிறார் என்றும், மூன்றாவது தோற்றத்தை படக்குழு வினர் ரகசியமாக வைத்திருப்பதாகவும், இந்த மூன்றாவது வேடம் இதுவரை விஜய் ரசிகர்கள் பார்க்காத புதுமையான கெட்டப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
திரையுலகிற்கு வந்து பல வருடங்கள் ஆனாலும் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சில வாரங்களுக்கு முன்பு ‘புலி’ படத்தின் படப்பிடிப்பை தலக்கோணம் பகுதியில் படமாக்கினர்.
தற்போது, மீண்டும் இப்பகுதியில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள் ளனர். தொடர்ந்து 10 நாட்கள் அந்தப் பகுதியில் சண்டைக் காட்சிகளை படமாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment