கயல் படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது ’காதலில் சொதப்புவது எப்படி’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். விரைவில் அவர் நடித்துள்ள ‘அனேகன்’ படமும் , ‘ஷமிதாப்’படமும் ரிலீஸாக இருக்கின்றன.
இந்நிலையில் மாரி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கயல்’படம் வெற்றிப்படமாக அமைந்தது.
இதனால் பிரபு சாலமன் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்குவார் என்று ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் தான் அவர் புதிய ஸ்கிரிப்டை எழுதி விட்டதாகவும், இதில் தனுஷ் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது உண்மையா என்று தெரிய

No comments:
Post a Comment