Monday, 23 February 2015

அஜித்தின் மெல்லிசான கோடு இப்போ அர்ஜுன் பக்கம்..!


ஒரு மெல்லிசான கோடு என்றாலே தெரிந்துவிடும் அது யாருடைய வசனம், என்ன படம் என்று. சமீபத்தில் ரிலீஸான என்னை அறிந்தால் படத்தில் அஜித் பேசும் இந்த வசனம் ரசிகர்களிடையே ரொம்ப பிரபலமானது. தற்போது அஜித்தின் இந்த மெல்லிசான கோடு இப்போ அர்ஜுன் பக்கம் திரும்பி இருக்கிறது.
ஆமாங்க அஜித் பேசிய இந்த வசனத்தையே அர்ஜூன் நடிக்கும் ஒரு படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை பின்னணியாக கொண்டு வெளியான 'குப்பி' படம் மற்றும் சந்தனக்கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளிவந்த 'வனயுத்தம்' ஆகிய படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ், தற்போது இயக்கவுள்ள படம் தான் 'ஒரு மெல்லிசான கோடு.
இதில் அர்ஜுனுடன் இன்னொரு ஹீரோவாக ஷாம் நடிக்க அக்‌ஷா பட் மற்றும் மனிஷா கொய்ராலா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம், முந்தைய ரமேஷ் படங்கள் போலவே ஒரு உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் கதையை படித்ததும் மிகவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டதாகவும், திரைக்கதையை ஒவ்வொரு ஸ்டெப்பாக ரமேஷ் நகர்த்தி சென்ற விதம் தன்னை மிகவும் கவர்ந்ததால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாக இந்த படத்தின் நாயகன் அர்ஜுன் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் ஒரு போராட்டக்காரராகவும், அவரை அடக்கும் கேரக்டரில் ஷாமும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

No comments:

Post a Comment