Monday, 6 April 2015

மேடையில் அர்ச்சனாவை சகட்டு மேனிக்கு தாக்கிய ராதாரவி..!


எந்த மேடையாக இருந்தாலும் சரி, எந்த இடமாக இருந்தாலும் சரி, எதையும் பேச தயங்காதவர் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான ராதாரவி. தன் மனதில் பட்டதை அங்கயே சொல்லிவிடுவார். இதனால் பல சர்ச்சைகள் உண்டாகியிருக்கிறது. அப்படி தான் சமீபத்தில் ஒரு சர்ச்சை உண்டாகி இருக்கிறது.
ஆர்.கே. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர் கே, மீனாக்ஷி தீட்சித், பூனம் கவுர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ’என் வழி தனி வழி’.இந்தப் படத்தின் விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. விழாவினை டிவி தொகுப்பாளினியும் சின்னத்திரை நடிகையுமான காமெடி டைம் புகழ் அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.
விழாவில் பேச ஒவ்வொருவரையும் அழைத்தார். அப்போது நடிகர் ராதாரவியை பேச அழைக்கும்போது நடிகர் ராதாரவி பேசுவார் என்று கூறிவிட்டார். இதனால் கடும் டென்ஷனான ராதாரவி அர்ச்சனாவை ஒரு பிடி பிடித்துவிட்டார்.
அவர் கூறியதாவது… “ஒருத்தரை பேச அழைக்கும்போது இப்படி மொட்டையாதான் கூப்பிடுவீங்களா? எனக்கு பொறுப்பான பதவி இல்லையா? தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர்னு சொல்ல தெரியாத நீங்க எல்லாம் ஏன் நிகழ்ச்சியை தொகுக்க வர்றீங்க.
நான் உங்களைப் பற்றி இந்த மேடையில பேசினா உங்களால தாங்க முடியுமா? என்று சகட்டு மேனிக்கு போட்டுத் தாக்க, முகமெல்லாம் சுருங்கி போய்விட்டது அர்ச்சனாவுக்கு. பின்னர் ராதாரவியிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அடுத்தவர்களை அழைக்க ஆரம்பித்தார் அர்ச்சனா.

No comments:

Post a Comment