கியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ 14 மாதங்களுக்கு பின் முதல் தடவையாக பொது இடத்தில் தோன்றியுள்ளார். கியூபாவும் அமெரிக்காவும் தம்மிடையேயான தொடர்புகளை மீள ஆரம்பிக்க இணக்கம் கண்டதையடுத்து பிடல் காஸ்ட்ரோ பொது இடத்தில் தோன்றுவது இதுவே முதல் தடவையாகும்.
அவர் உள்ளூர் பள்ளி ஒன்றில் அந்நாட்டு அதிகாரிகள் குழுவினரை சந்தித்து உரையாடினார். அவர் இதற்கு முன் பொது இடத்தில் தோன்றிய நிகழ்வாக கடந்த வருடம் ஜனவரி மாதம் இடம்பெற்ற ஹவானா கலாசார நிலைய திறப்பு விழா விளங்குகிறது.

No comments:
Post a Comment