Tuesday, 7 April 2015

முட்டாள்தனமான கேள்விகளை கேட்காதீங்க.. மீடியாவிடம் சீறிய ரஹ்மான்..!


தனது இசை மூலம் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது கோலிவுட், பாலிவுட் , ஹாலிவுட் என அனைத்து மொழி படங்களுக்கும் பிஸியாக இசையமைத்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் ரஹ்மான்.
அப்போது இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மீடியாக்காரர்கள், அவர் உள்ளே நுழைந்ததும் ஒரு கேள்வியை எழுப்பினர். நீங்கள்தான் அடுத்த இளையராஜா என்பதைக் கேட்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? என்றனர்.
சட்டென்று நிமிர்ந்து ரஹ்மான், "இன்னொரு முறை இப்படிச் சொல்லாதீர்கள். இளையராஜாவுக்கு நிகர் அவரே தான். வேற யாரும் கிடையாது. அவர் இடத்தில் யாரையும் வைக்கவும் முடியாது.
இந்த மாதிரி முட்டாள்தனமான கேள்விகளை என்னிடம் கேட்டு என்னிடமிருந்து எதையாவது பதிலாகப் பெற்று விடலாம் என நினைக்காதீர்கள்," என்று ஆவேசமாக கூறினார். உடனே மீடியாக்காரர்கள் எல்லோரும் ஆடிப் போனார்கள். கேள்வி கேட்டவரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment