Wednesday, 3 June 2015

அப்போ அஜித்.. இப்போ புனீத்..!


தமிழ் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களாக ஒரு வெற்றி படமாவது கொடுக்க வேண்டும் என்று போராடி வந்த அருண் விஜய்க்கு நல்ல வெற்றி படமாக அமைந்தப்படம் 'என்னை அறிந்தால்'.
’தடையற தாக்க’ படம் அருண் விஜய்க்கு ஓரளவுக்கு நல்ல படமாக அமைந்தாலும் இப்படம் தான் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகினரிடம் இருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் பெரும் பாராட்டை பெற்றார் அருண் விஜய்.
இந்நிலையில் தற்போது கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமாருடன் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்அருண் விஜய்.  ‘தோத்மனே ஹுட்கா’ படத்தைத் தொடர்ந்து, பெயரிடப்படாத புதிய கன்னட படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் புனீத் ராஜ்குமார். சரவணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் மூலம் கன்னடத்திலும் அறிமுகமாகும் நடிகர் அருண் விஜய், புனீத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் டுவிட்டரில் பதிவேற்றியிருக்கிறார். அதோடு, ‘‘இன்னொரு புதிய அவதாரம்... புனீத் ராஜ்குமாருடன் பெங்களூரு படப்பிடிப்பில்!’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறாரா அல்லது வேறு எதுவும் புதிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறாரா என்பது குறித்து எந்த தகலும் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment