Tuesday, 2 June 2015

சொதப்பும் நடிகை.. கடுப்பில் மாஸ் நடிகர்..?


மாசு படத்தைத் தொடர்ந்து விக்ரம்குமார் இயக்கிவரும் 24 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. அந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்தது.
சூர்யாவுக்கு 36 வயதினிலே, மாசு ஆகிய படங்களின் வெளியீட்டு வேலைகள் இருந்ததால் அவற்றை முடித்துவிட்டு அடுத்த கட்டப்படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார். அதன்படி நேற்று முதல் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.
திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடங்க எல்லா வேலைகளும் தயார் என்றாலும் படத்தில் நடிக்கவேண்டிய அம்மா நடிகை தேதி தராமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு ஒன்றாம்தேதி தொடங்கினாலும் 5-ஆம் தேதியிலிருந்து அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாகச் சொல்லியிருந்தாராம்.
ஆனால் இப்போது 5-ஆம் தேதியை உறுதிப்படுத்துவதற்காக அவரிடம் பேசினால், அந்தத் தேதிகளை வேறொரு படத்துக்குக் கொடுத்துவிட்டதாகச் சொன்னாராம். அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், நீங்கள் எங்கள் படத்திற்கு தானே முதலில் டேட்ஸ் கொடுத்திங்க என்று கூறினார்களாம். ஆனால் அந்த நடிகை, நான் அந்தப்படத்துக்குப் போகவேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறாராம்.
இதனால் சூர்யா படக்குழுவினர் அதிர்ச்சியில் இருக்கின்றனராம். இருந்தாலும் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இன்னும் 4 நாட்கள் இருக்கின்றன என்பதால் அதற்குள் இந்தப்படப்பிடிப்புக்கு வருவதற்கான சம்மதத்தைப் பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார்களாம்.
எவ்வளவோ படங்களில் நடித்தும் இதுபோன்றதொரு சிக்கல் வராத அந்த நடிகை இப்போது இப்படியொரு சிக்கல் செய்வது எதனால்? என்று புரியவில்லை.

No comments:

Post a Comment