Monday 27 April 2015

கன்பார்ம் செய்தார் த்ரிஷா.. இது மூன்றாவது முறை..!


’இரண்டாம் உலகம்’ தோல்வியில் மூழ்கி கிடந்த செல்வராகவன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் என்று ஏற்கனவே அறிவித்திருந்தோம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராக இருக்கும் இந்தப் படத்தில் சிம்பு ஹீரோவாகவும், த்ரிஷா ஹீரோயினாகவும் நடிப்பதாக கூறப்பட்டது.
தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் த்ரிஷா. ‘அலை’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்புவும், த்ரிஷாவும் இணையும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு, மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் துவங்க உள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். படத்தில் முக்கிய கேரக்டர்களில், டாப்ஸி மற்றும் ‘லிங்கா’ படத்தில் நடித்த ஜெகதிபாபு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, த்ரிஷா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜீனியஸ் இயக்குநர் படத்தில் நடிக்க உள்ளதால் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். த்ரிஷா - தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், திருமணம் கூட ரத்தாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், த்ரிஷாவின் புதிய பட அறிவிப்பு வெளியாகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment