Sunday 26 April 2015

செம்மரக்கடத்தல் நடிகை: ஒரே சமயத்தில் 2 பேருடன் குடும்பம் நடத்தியது அம்பலம்….


தெலுங்கு புது முக நடிகையான நீத்து அகர்வால், செம்மரக்கடத்தலில் முக்கிய பங்கு கொண்டது மட்டுமல்லாது, செம்மரக்கடத்தல்காரர் உட்பட இருவருடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் 20 தமிழக கூலித் தொழிலாளர்களை அம்மாநில போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதற்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. குற்றம் செய்யத் தூண்டிய பணக்கார முதலைகளை விட்டுவிட்டு கூலித் தொழிலாளர்களை ஆந்திர அரசு கைது கூட செய்யாமல் சுட்டுப் பொசுக்கியது கடும் விமர்சனத்துக் குள்ளானது.
இந்த சம்பவம் ஒரு மனித உரிமை மீறலாக அறிவிக்கப்பட்டது. மேலும், இது குறித்து முறையான விசாரணை செய்து வருகிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம். அதே சமயம், மேலும் சில தமிழக தொழிலாளர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், செம்மரக்கடத்தல் கும்பலைக் கூண்டோடு பிடிக்கும் முயற்சியில் முழு மூச்சோடு இறங்கி செயல்பட்டு வருகிறது ஆந்திர போலீஸ்.
இதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த புதுமுக திரைப்பட தயாரிப்பாளர் நடிகர் சரவணன் உட்பட 6 பேரைக் கைது செய்தது ஆந்திர காவல்துறை. அவர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து, மஸ்தான் வாலி என்ற முக்கிய புள்ளியைக் கைது செய்தது. மஸ்தான் வாலியிடம் மேற்கொண்ட விசாரணையில், தெலுங்கு புது முக நடிகை நீத்து அகர்வாலுக்கும் இந்த செம்மரக்கடத்தலில் பங்கு இருப்பது தெரியவந்தது.
மேலும், இந்த விசாரணையில், வடமாநிலத்தை சேர்ந்த நீத்துவின் ஹிந்தி மற்றும் ஆங்கில கம்யூனிகேஷனை பயன்படுத்து மஸ்தான் வாலி வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும், செம்மரக்கடத்தல் செய்தது அம்பலமானது. இது மட்டுமல்லாது, செம்மரக்கடத்தலில் கிடைத்த பணத்தை நீத்துவின் வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருப்பதும் தெரியவந்தது.
இந்த தகவல் கிடைத்த உடனேயே, நீத்துவின் வங்கிக் கணக்கை போலீஸார் முடக்கிவிட்டனர். நீத்துவை கைது செய்யவும் முற்பட்டனர். ஆனால், அதற்குள்ளாக உஷாரான நீத்து, எப்படியோ தலைமறைவாகிவிட்டார். இதை அடுத்து, நீத்துவைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து, பெங்களூரு, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
ஐதராபாத்தில் நீது அகர்வாலுக்கு சொந்தமான வீடு உள்ளது. தனிப்படையில் ஒரு படை அந்த வீட்டை ஜல்லடை போட்டு அலசியது. வீட்டில் ஒரு குழந்தையும், வேலைக்காரியும் மட்டுமே இருந்த நிலையில், வேறு ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று போலீஸார் சோதித்த போது, அங்கிருந்த ஆவணங்கள், நகை பணம், விலையுயர்ந்த பொருட்கள் அனைத்து மாயமானது தெரியவந்தது.
நீத்து மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டார் என்று தெரிந்து தனிப்படை போலீஸார் சிலர் இரவு பகலாக வீட்டை கண்கானிக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர். இதன் விளைவாக, நேற்று காலை நீத்து அவரது இல்லத்திற்கு வந்த போது, போலீஸாரால் கைது செய்யப்பட்டார். நீத்து முக்கிய புள்ளி என்பதால், ஸ்பெஷல் விசாரணைக்காக ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவரிடம் நடத்திய விசாரணை நடத்தியதில், அவருக்கு ஏற்கனவே ரத்தன் என்பவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளதும், அதன் பின் தான் மஸ்தான்வலி தயாரித்த படத்தில் நடித்தார் என்பது, அப்போது இருவருக்கும் பழக்கமாகி, செம்மரகடத்தல் தொழிலில் நேரடியாக பங்கேற்றதும் தெரியவந்தது. இதில் அதிர்ச்சி கரமான தகவல் என்னவெனில், நீத்து, மஸ்தான் வலியுடன் மனைவியாக குடித்தனம் நடத்திய அதே வேளையில் ஐதராபாத்தில் உள்ள சொந்த வீட்டில் தனது கணவர் ரத்தனுடனும் குடும்பம் நடத்தி வந்தாராம்.
இந்நிலையில், கர்னூல் மாவட்டம் ருத்ராவரம் போலீசார் நீது அகர்வாலை கைது செய்து அழைத்து வந்தபோது, அவரது முகம் மூடப்பட்டிருந்தது. செய்தியாளர்கள் சூழ்ந்திருந்த போது நீத்து பேசுகையில், ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் மஸ்தான் வலியிடம் நான் சரண் அடைந்து விட்டேன். மஸ்தான் வலி என்னை பல முறை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளார்’ என்று கூறி கதறி அழுதுள்ளார். இதைத் தொடர்ந்து, நீது அகர்வால் கோவில குண்டலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை மே 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் நந்தியாலா சிறையில் அடைக்கப்பட்டார். நீது அகர்வாலை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாக கர்னூல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment