Tuesday 28 April 2015

தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரியுமா??


தேன் விலைமதிக்கமுடியாத உணவு பொருள். இது ஒரு அறிய வகை மருந்து. தேனை உரிமைகொண்டாடாத நாடுகளே இல்லை. சுத்தமான தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது. இவற்றின் முழுமையான பயன்கள் அனைத்தையும் யாரும் அறிந்திருக்கமாட்டீர்கள்.
தேனில் 78 % கார்போ ஹைட்ரேட்டுகளும், 18 % தண்ணீரும், 0.2 % தாதுப்பொருட்களும், 3.8 % பயன்தரும் பலவித நுண்ணிய வளங்களும் இருக்கின்றன. இதுதான் என குறிப்பிட்டு சொல்லமுடியாத பல நல்ல பொருள்களும் இதில் அடங்கியுள்ளன. பூவிலுள்ள மகரந்தம், பிசின் மற்றும் எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணைகள் போன்றவைகள் அவற்றில் உள்ளன. மகரந்தம் என்பது ஒரு நேர்த்தியான பொடி. அதில் பிசிதம் நிரம்ப உண்டு. அது சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தலைசிறந்த ஆகாரமாகும்.
தேனை அதன் நிறத்தை வைத்தே வகைப்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா??
ஆம், சுத்தமான தேன் தனிப்பட்ட மனமும் சுவையும் கொண்டது. சுத்த வெள்ளையாகவோ அல்லது கருப்பாகவோ இருப்பது நல்ல தேன் என்று தெரிந்துகொள்ளலாம். தேனின் மனமும், நிறமும் எந்த பூக்களிலிருந்து தேனீக்கள் மது சேர்க்கின்றதோ அப்பூக்களை சார்ந்தே அது இருக்கும். வேப்பம்பூவில் சேகரிக்கப்பட்ட தேன் சற்று கசந்தே இருக்கும். ஹோலி தேன் கருப்பாக இருக்கும் நல்ல வாசனை கமழும். மஞ்சள் நிற தேன் பல வகை காடுகளில் சேமித்து வைக்கப்பட்ட தேனாகும். பளிங்கு போன்று முகம் பார்க்ககூடிய தெளிவுடைய தேனை சற்று நேரம் வைத்திருந்தால் உறைந்து விடும். இதுவும் மிகவும் மேலான தேனாகும்.
தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை காணலாம்!!
மருத்துவ ஆராய்ச்சியின் முடிவில் தேன் மிக சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கண்டறிந்துள்ளனர். காமாலை, சீதபேதி நோய்களையும், மூத்திரப்பை மற்றும் இருதயம் முதலிய முக்கிய உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் நல்ல மருந்து தேன் என தெரிவிக்கின்றனர்.
நாம் உண்ணும் உணவினை செரிக்கும் நல்ல மருந்து தேன் . தேன் இருதய வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது ஆகும். இதனை சாப்பிடுவதால் மனம் தேறுவதுடன் இருதயமும் துப்புரவாகி வலிமை அடைகிறது.
பித்தம் அதிகமாகி அல்லல்படுபவர்கள் இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொண்டு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு தேனில் இரண்டு அல்லது முன்று நாட்கள் ஊறவைத்து அதிகாலையில் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சாப்பிட்டுவந்தால் எப்படிப்பட்ட பித்தமும் நீங்கிவிடும்.
குழந்தைகளுக்கு தினந்தோறும் அரை தேக்கரண்டி தேனினை கொடுத்து வந்தால். குழந்தைகளின் தசைகள் உறுதியாகும். ரத்தம் சுத்தமாகி ஆற்றலுடனும், அழகுடனும் விளங்குவார்கள்.
கடும் வயிற்று வலியா கவலை வேண்டாம். ஒரு டம்ளர் கொதிக்கும் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனினை விட்டு நன்றாக கலக்கி பருகிவிட்டால் பதினைந்து நிமிடங்களில் வயிற்று வலி பறந்துவிடும்.

No comments:

Post a Comment