Wednesday 29 April 2015

தயாரிப்பாளர்களை தெறிக்கவிடும் அஞ்சலி..!


இயக்குநர் ராம் இயக்கிய ’கற்றது தமிழ்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பிறகு ஒரு சில வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அந்நேரம் பார்த்து தன் சித்தியுடன் சண்டை போட்டு பல சர்ச்சைகளில் சிக்கி காணாமல் போனார்.
பிறகு அஞ்சலி எங்கு இருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் அப்போ அப்போ அவரைப் பற்றிய செய்திகள் மட்டும் வந்து எட்டி பார்க்கும். ஒருநாள் திடீரென்று திரும்பி வந்த அஞ்சலி ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார்.
பிறகு தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சுராஜ் இயக்கும் ”அப்பாடக்கர்” படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்னொரு ஹீரோயினாக த்ரிஷாவும் நடித்து வருகிறார். இதையடுத்து விமலுக்கு ஜோடியாக ”மாப்பிள்ளை சிங்கம்” படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களிலும் பிஸியாக நடித்து வரும் அஞ்சலில் சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வராமல் தயாரிப்பாளர்களை நிறையவே கஷ்டப்படுத்துகிறாராம்.
அதோடு முன்பு மாதிரி நடந்து கொள்ளாமல் ரொம்பவே பந்தா செய்கிறாராம். நடிக்க அழைத்து வந்தாயிற்று பொறுத்துத்தான் போக வேண்டும் என்று இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் படத்தை முடித்தால் போதும் என்று இருந்திருக்கிறார்கள். இதனிடையே மேலும் சில தமிழ்ப் படங்களில் அஞ்சலியை நடிக்க வைக்கலாம் என சிலர் நினைத்திருக்கிறார்கள்.
ஆனால், அஞ்சலியின் புரியாத நடவடிக்கை காரணமாக அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்கலாம் என நினைத்த தயாரிப்பாளர்கள் கூட அவர்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்களாம். என்னம்மா அஞ்சலில் இப்படி பண்றீயேம்மா..?

No comments:

Post a Comment