Wednesday 29 April 2015

”இவன் எங்களுக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் அபாயகரமானவன்”


கைக்குண்டு, துப்பாக்கி மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் என்பவற்றுக்கு அருகில் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று உறங்குவதை வெளிப்படுத்தும் புகைப்படமொன்றை அந்த தீவிரவாத குழுவிற்கு எதிரான செயற்பாட்டாளர் ஒருவர் இணையத்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வெளியிட்டு, "இந்தக் குழந்தை எங்களுக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் அபாயமிக்கதாகும்" என எச்சரித்துள்ளார்.
மேற்படி புகைப்படம் முதன் முதலாக ஐ.எஸ். தீவிரவாதிகளாலேயே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தையின் பெயர் ஜராஹ் எனவும் அதன் தாய்மார் பெயர் 'ஒம்' எனவும் தந்தையர் பெயர் 'அபு' எனவும் ஐ.எஸ். தீவிரவாதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் சிரியாவைச் சேர்ந்த அபு வார்ட் அல்ரக்காவி என்ற மேற்படி தீவிரவாதிகளுக்கு எதிரான செயற்பாட்டாளர் இந்த புகைப்படத்தை மீண்டும் வெளியிட்டு எச்சரிக்கை செய்துள்ளார்.

No comments:

Post a Comment