Saturday 31 January 2015

நடிக்க வேண்டும் என்றால் படுக்க அழைப்பார்கள்..! நடிகை ஆதங்கம்..!


மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த்-2 போன்ற தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நடிகை சுர்வீன் சாவ்லா. இவர் தமிழை தவிர இந்தியிலும், தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இவர் பாலிவுட்டில் ’ஹேட் ஸ்டோரி-2’ என்ற படத்தில் பயங்கர செக்ஸியாகவும், கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து அவர் பேட்டி அளிக்கையில், பட வாய்ப்பு தருவதாகக் கூறி, படுக்கைக்கு அழைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு சிலர் கேட்பதையும், அதை அவர் சமாளிப்பதையும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நடிக்க வந்து நான் இங்கு நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சில அனுபவங்கள் இன்றும் ஆறாமல் இருக்கின்றன. சினிமா வாய்ப்புக்காக வேறு மாதிரி ‘அட்ஜஸ்ட்' செய்துகொள்ளச் சொன்னவர்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் அதிகம்.
ஆனால் இப்போது நான், அநாகரிக விண்ணப்பங்களை என் போக்கில் எப்படிக் கையாளுவது என்று கற்றுக்கொண்டிருக்கிறேன். திரையுலகில் ஒரு நடிகர் அல்லது நடிகையின் திறமையைப் புரிந்து அதற்கேற்ற பாத்திரங்களைத்தான் தருகிறார்கள். வெறும் கவர்ச்சி மட்டும் காட்டச் சொன்ன பல வாய்ப்புகளை நான் நிராகரித்திருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

Thanks to Ajith for his love and affection…!



Its been a long time talking the man who can sport any topic from top to bottom... But we have only a neutral place of discussion called cinema. So called him with some questions about his experiences in the film ' Yennai Arindhaal'. He greeted us as ever sweet as after some pranks. Just got with some fresh answers from him.
(i) In a recent interview Director Gautham has said that due to non availability of your dates He made VTV Ganesh to act in ‘Vinnaithadi Varuvaaya’. Have you felt that you could have done that role.
Yes, I used to feel for missing that role. But VTV Ganesh made a tremendous mark with that role. Am happy for him.But i wonder if Gautham had really thought about me for the role.
(ii)You are joining with Gautham after a very long time… what is the Difference between ‘Minnale’ Gautham Menon and ‘Yennai Arindhaal’ Gautham Menon.
Minnanle Gautham was 13 years younger… debutant, he was so vibrant and tensed then. He used to come in a bike for the shooting spot.
Yennai Arindhaal Gautham is 13 years experienced… he handles things in a matured way… Same love and affection… Today he comes in Audi.
(iii) We have always seen you as Hero’s friend clads in T-shirt with Coolers with a dramatic look… but in this film ‘Yennai Arindhaal’ you look so lively and in a different getup too.. what is your character in the film sir.?
Yes, My role is a person who carries himself according to the situation. He will be serious at times… he will mischievous at times… the character makes the audience to laugh as well as to think. Hope all the comedy scenes shot will tackle Editor Antony’s cuttings…
(iv) You acted as Ajith sir’s Friend in many movies… ‘Kadhal Mannan’ Shiva or ‘Yennai Arindhaal’ Satyadev Who is your best friend?
Shiva- a youthful Lover boy , Satyadev- a Responsble Police Officer Two of them are my best friends
(v) It is very obvious that Thala fans ruling the social media. Have you got experience with them..
They are very fond of him… From the day they got to know that I am acting in this film. They stalked me asking “how is our thala?” , “what is the story…? They are tremendous…
(vi) Describe Trisha in Two words
Sweet and Feminine – Trisha
(vii) Describe Anushka in Two words
Clever and Charming – Anushka
(viii) You have been an Ardent follower of Periyaar now turned a Baba devotee…how was this change happened.
I have spoken about Periyaar’s principles Women Education, against Communities and Superstitious believes in many of my films. I am only against foolishness and furiousness in religions.
(ix)How much the film ‘Yennai Arindhaal’ will be important in your career.
I have played an important role. This will be one of the important films in my career.
Thanks to Ajith for his love and affection.

MS Excel –ல் பயனப்டுத்தக் கூடிய சில Shortcut Keys ..!


MS Excel அதிகமாக பயன்படுத்தப்படும் ஒன்று. பல பயன்பாட்டிற்கு MS Excel உதவியாக இருக்கின்றது.
அதேபோல், இவற்றிக்கு ஷார்ட்கட்களையும் Windows வழங்குகிறது. ஆனால் நாம் அதிகளவில் பயன்படுத்துவது, Ctrl+C, Ctrl+V, Ctrl+X போன்ற சில மட்டும் தான்.
அப்படி நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத சில ஷார்ட்கட் கீ பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Ctrl+C – Copy
Ctrl+V – Paste
Ctrl+X – Cut
Ctrl+Z – Undo
Ctrl+Y – Redo
Ctrl+A – Select All
Ctrl+’+’ – Insert Row or Column
Ctrl+’-‘ – Delete Row or Column
Ctrl+Space – Select entire Column
Shift+Space – Select entire Row
Ctrl+ 1 – Format
Ctrl+ 4 - Change into Currency
Excel-லில் Ctrl+Shift கீகளுடன் F1 முதல் F9 வரையிலான காம்பினேஷன்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
Ctrl+Shift+F1 – புதிய Excel ஷீட்டை ஓபன் செய்ய.
Ctrl+Shift+F2 – தற்போதைய ஒர்க் புக் சேமிக்க(Save) செய்ய.
Ctrl+Shift+F3 – Row மற்றும் Column ஆகியவற்றைப் பயன்படுத்தி பெயர்களை உருவாக்க.
Ctrl+Shift+F6 – பல Excel கள் ஓபன் செய்யப்பட்டிருந்தால் அவற்றிற்குள்ளாக Swap செய்ய உதவும்.
Ctrl+Shift+F11 – MS ஸ்க்ரிப்ட் எடிட்டர் ஓபன் செய்யப்படும்.
Ctrl+Shift+F12 – பிரிண்ட் செய்வதற்கான பக்கம் ஓபன் ஆகும்.

கற்ப்பை பற்றி தமிழ் பெண்களின் கருத்து (வீடியோ)


பாய் ஃபிரண்ட், கேள் ஃபிரண்ட் என்ற கலச்சாரம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில் பெண்களின் கற்பு என்பது கேள்விக்குறியான ஒன்று தான், என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது நம் நாடு.
ஒரு காலத்தில் கற்பை உயிரைவிட அதிகமாக மதித்த நாடு இது. ஆனால்… இப்போது?? அது கேள்விக் குறிதான் என்பது மறுக்க முடியாத உண்மை. திருமணத்திற்கு முன்பே இதெல்லாம் தேவைதானா?? இதெல்லாம் தெரிந்து செய்கிறார்களா இல்லை தெரியாமல் செய்கிறார்களா??
இது பற்றி இணையத்தில் வெளியான சுவாரஸ்யமான வீடியோ உங்களுக்காக…
வீடியோ கீழே...

Coffee குடிப்பது நல்லதா?? கெட்டதா??


காஃபி குடிப்பது நல்லதா.. இல்ல கெட்டதா அப்படினு ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தலாம்.
காஃபி குடிப்பதால் கெட்ட விஷயங்கள் இருந்தாலும், பல நல்ல விஷயங்கள் இருக்கு. பொதுவா காஃபி விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். காஃபி குடிப்பதால் நிறைய நன்மைகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் காஃபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.
காஃபி உங்களை ஊக்குவிப்பதால், மன அழுத்தத்தை எதிர்த்து அது சிறப்பாக போராடும்.
உங்கள் நரம்புகள் மற்றும் ஒட்டு மொத்த நரம்பியல் அமைப்பையும் காஃபியில் இருக்கும் கஃப்பைனால் ஊக்குவிக்க முடியும்.இதனால், மிக தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்ள நீங்கள் விரும்பினால், காஃபி குடிப்பது சற்று உதவும்.
காஃபியில் பொட்டாசியம், மாங்கனீஸ், பாண்டோதெனிக் அமிலம், நையாசின், மக்னீசியம் மற்றும் ரைபோஃப்ளேவின் அடங்கியுள்ளது.
சர்க்கரை நோயைத் தடுக்கவும் காஃபி உதவுகிறதாம்.
புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளை காஃபி குறைக்கும்.
காஃபி குடிப்பதால் உங்களால் தற்காலிகமாக புத்திசாலித்தனமாக சிந்திக்க முடியும்.
கல்லீரலைப் பாதுகாக்கவும் காஃபி பயன்படுகிறது.
எனினும் காஃபி குடிப்பது அளவாகவே இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமானால் ஆபத்துதான்.

சூப்பர் சிங்கர் அரங்கத்தையே கதறி அழ விட்ட சிறுமி..


தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் எப்பவும் புதுமையான நிகழ்ச்சிகளை கொடுத்து வரும் விஜய் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று ஏர்டெல் சூப்பர் சிங்கர்.
கோவை, மதுரை, சென்னை, திருச்சி என ஒவ்வொரு ஊரிலும் உள்ள பாடும் திறமையானவர்களை கண்டறிந்து, அவர்களை இசைமேதைகளின் முன்பு பாடவைத்து அவர்களில் யார் நன்றாக பாடுகிறார்களோ அவர்களுக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கர் பட்டத்தை வழங்கிறார்கள்.
அதன்படி தற்போது நடைப்பெற்றுவரும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் 4-ல் நடந்த ஒயில்காட் ரவுண்டில் அனுஷ்யா என்ற சிறுமி தனது பாடலால் அரங்கத்தை அழ வைத்தார்..



பிறந்த நாளில் பரவும் வீடியோ.. கதறும் எமி ஜாக்ஸன்..!



தமிழ், இந்தி, தெலுங்கு என்று அனைத்து மொழி சினிமாவிலும் ஹீரோயின் என்றாலே வெள்ளை நிற தேகத்துடன் தான் இருக்க வேண்டும் என்பது விதி.
அப்படியிருக்க ஒரு வெள்ளை கார பெண்ணே நம் நாட்டு சினிமாவில் நடித்தால் எப்படியிருக்கும். பார்க்க நன்றாக இருக்கும், ஆனால் நிலைத்து நிற்க முடியாது என்று பலர் கூறினாலும் அதையெல்லாம் உடைத்து தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார் எமி ஜாக்ஸன்.
இன்று அவருடைய பிறந்த நாள். மதராசபட்டினம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான எமி, லண்டனில் பெரிய மாடல். இவரை யதார்த்தமாக பார்த்த இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனே தன் படத்தில் கமிட் செய்ய, படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அவர் நடித்த தாண்டவம் படமும் பெரிதாக ஓடவில்லை. ஆனால், சமீபத்தில் வெளிவந்த ’ஐ’ படத்தின் மூலம் மீண்டும் வெற்றி கொடி நாட்டினார். இப்படத்தின் வெற்றி இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதைத்தவிர அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் எமி தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மாடலாக இருந்த போது எடுத்த கவர்ச்சி புகைப்படங்களின் வீடியோ ஒன்றை வாட்ஸ் ஆப்பிலும், சமூகத்தளங்களிலும் பரவ விட்டு வருகின்றனர் சில விஷமிகள்.
ஐ படம் வெளிவரும் போது எமியின் ஆடையில்லா புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினர். தற்பொழுது பிறந்த நாள் சமயத்தில் பிறந்த நாளுக்கு கவர்ச்சி விருந்து படைத்த எமி என்று இந்த வீடியோவை சிலர் வெளியிட்டு வருகின்றனர்.

இலக்கணம் இல்லா காதல்..!


கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன் - திவ்யாவின் காதல் கதை. வேற்றுச்சாதியை சேர்த்த இவர்கள் பல போராட்டங்களுக்கு பிறகு திருமணம் செய்துக்கொண்டு கடைசியில் வாழ முடியாமல் போனது.
திருமணத்திற்கு பிறகு திவ்யா தன்னுடைய பெற்றோர் தான் முக்கியம் என்று சென்றுவிட்டதால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் இளவரசன். இதனால் சாதி கலவரம் உண்டாகிவிடுமோ என்று அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தன் உயிரை விடுவதற்கு முன் இளவரசன் கடைசியாக எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று படித்தவர்கள் எல்லோரையும் உருக வைத்தது.
இந்நிலையில் தற்போது இந்த காதல் கதையை படமாக்க இருக்கிறார்கள். வாச்சாத்தி என்ற கிராமத்தில் பொதுமக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை, வாச்சாத்தி என்ற பெயரிலேயே படமாக்கியவர் ஆர் ரமேஷ். இவர் அடுத்து இளவரசன் - திவ்யாவின் காதல் கதையை படமாக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘இலக்கணம் இல்லா காதல்' என்று தலைப்பிட்டுள்ளார்.
இப்படக்கதையில் நாயகன் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா. இதில் ஆர். ரமேஷ், கவிதா, பாரதி, ராதாரவி, நந்தினி, விஜயகுமார், கெளசல்யா, வி.சி.ஜெயமணி, தேவிகிருபா, போண்டா மணி, ஐஸ்வர்யா, கராத்தே ராஜா, ப்ரியா, பெஞ்சமின, ஜெகதீஸ், விஜய கணேஷ், பழனி, கிங்காங், விஜயகுமார். பி.எஸ். ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படத்தை வி.சி.ஜெயமணி இயக்குகிறார்.
‘வாச்சாத்தி' படம் போலவே இப்படமும் விமர்சகர்க்ளிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெறும் என ஆர்ரமேஷ் மற்றும் வி.சி.ஜெயமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். படத்தை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதிகளில்தான் படமாக்குகிறார்கள்.

ஒரே விழாவிற்கு இவ்வளவு பிரபலங்களா..? இப்போ தெரிதா கேப்டனின் பவர்..


விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கும் இப்படத்தை சுரேந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றார்கள். ஒருவர் நேஹா. இவர் 2010ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர். இன்னொருவர் புதுமுகம் சுப்ரா நடிக்கிறார்.
இவர்களுடன் ரஞ்சித், தேவயானி, போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், சிங்கம் புலி உட்பட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயகாந்தும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை (ஜன 31) 6 மணிக்கு வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. விழாவிற்கான அழைப்பிதழ் திரையுலகினருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் கலந்து கொள்கிறவர்கள் பெயர்கள் இடம்பெற வில்லை.
இந்த நிலையில் சகாப்தம் படத் தயாரிப்பு தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் விழாவில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம் கலந்து கொள்வதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த செய்தி குறிப்பு வருமாறு: நாளை (இன்று) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள ​​சகாப்தம் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், சரத்குமார், விஷால், பிரபு, விக்ரம் பிரபு, கெளதம் கார்த்திக், சிபிராஜ், சிம்பு, டி.ராஜேந்தர், தனுஷ், விமல், கருணாஸ், வெங்கட் பிரபு, கிருஷ்ணா, பிரேம்ஜி, அர்ஜுன், தியாகராஜன், பிரசன்னா, அதர்வா, ஷக்தி, பாண்டியராஜன், ப்ரித்வி, ராஜுசுந்தரம், பாக்யராஜ், சாந்தனு, ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான நடிகர்களும்,
ஷங்கர், முருகதாஸ், கெளதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், பாண்டிராஜ், விஷ்ணுவர்தன், மிஸ்கின், கங்கை அமரன், பேரரசு, மகிழ்திருமேணி, நலன் குமாரசாமி, செல்வராகவன், ஜெயம் ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கஸ்தூரி ராஜா, விக்ரமன், ஆர்,கே.செல்வமணி, பூபதிபாண்டியன், சுராஜ், மாதேஷ், பாலாஜி சக்திவேல், பிரபு சாலமன், கிருஷ்ணா​, ​சுசீந்திரன்​ ​ உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்களும், இன்னும் ஏராளமான முன்னணி தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொள்ள உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
அடேங்கப்பா அவ்வளவுதானா..

100 கோடி வரி.. அடிமேல் அடி வாங்கு ராஜபக் ஷே..!?


யோஷிதா ராஜபக் ஷே வின் CSN ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு 100 கோடி வரி விதிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அதிபராக பதவி ஏற்ற பின்பு இலங்கையின் இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது.
அப்போது நிதியமைச்சர் ரவி கருணா,
‘நாட்டில் உள்ள விளையாட்டு சேனல்களுக்கு, ஒருமுறை வரியாக, 100 கோடி ரூபாய் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். இலங்கையில், விளையாட்டுக்கென, CSN சேனல் மட்டுமே உள்ளது என்பதால், அந்நிறுவனம் இந்த வரியை செலுத்தினால் தான் ஒளிபரப்பை தொடர முடியும். ஆனால், இந்நிறுவனம், துவங்கியது முதல், அரசுக்கு, 1 ரூபாய் கூட வரி செலுத்தவில்லை’ என நிதியமைச்சர் தெரிவித்தார்.
அரசு சேனலான ரூபவாஹினி தான் முன்பு கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. ஆனால், ராஜபக் ஷே பதவி ஏற்ற பின், எந்தவித அறிவிப்பும் இன்றி தனது மகனின் CSN நிறுவனத்திற்கு அந்த உரிமையை வழங்கினார். அது முதல், கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமங்களையும், CSN பெற்று வந்தது.
தற்போது, ரூபவாஹினியிடம் இருந்து விளையாட்டு ஒளிபரப்பு உரிமம் பறிக்கப்பட்டதில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க, இலங்கை அரசு உத்தரவிட்டுஉள்ளது.

படப்பிடிப்பில் அலறி அடித்துக் கொண்டு ஓடிய கயல் ஆனந்தி..!


ரக்‌ஷிதா என்ற பெயரில் ஆந்திரா பக்கம் இருந்தவரை கயல் ஆனந்தி என்ற பெயரில் தமிழ்நாடு பக்கம் அழைந்து வந்தவர் பிரபு சாலமன். கயல் படம் தான் அவருக்கு முதல் படம் என்றாலும், கயலுக்கு பின்பு நடித்த பொறியாளன் படம் அவருக்கு முதல் படமாகிவிட்டது.
இந்த இரண்டு படங்களும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் ஆனந்தியின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு ஆனந்தியின் அசரடிக்கும் கண், அவருக்கு பட வாய்ப்புகளை தேடி வரச்செய்கிறது.
கயல் படம் வந்த பிறகு அவரை புக் பண்ணுவது பற்றி யோசிக்கலாம் என்று காத்திருந்த சில இயக்குநர்கள் தற்போது அவரிடம் கதை சொல்லி கமிட் பண்ணி வருகின்றனர். இதனால் தற்போது இரண்டு படங்களில் நடிப்பதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
பென்சில்,டார்லிங், படங்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஆனந்திதான் நாயகி. இப்படம் தவிர, நய்யாண்டி சற்குணம் இய க்கும் சண்டி வீரன் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடிக்கிறார் ஆனந்தி. தஞ்சாவூர் அருகி லுள்ள வடுவூர் ஏரியில் சமீபத்தில் சண்டி வீரன் படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர்.
அப்போது ஆனந்திக்கு மிக அருகில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதாம். முதலில் இதை கவனிக்காததால் தைரியமாக நடித்துக் கொண்டிருந்த ஆனந்தி, தன் பக்கத்தில் பாம்பு ஊர்ந்து சென்றதை உ ணர்ந்ததும் அந்த இடத்தை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்.
பின்னர், அந்த ஏரிக்கு அருகே பாம்பு நடமாட்டம் இருப்பதெல்லாம் ரொம்பவும் சகஜம் என்றும், அதெல்லாம் விஷம் இல்லாத தண்ணீர் பாம்புகள் என்று சொன்னதை அடுத்து தைரியமாக நடித்து முடித்திருக்கிறார் ஆனந்தி.

10 ஆண்டுகளில் இந்தியா 300 லட்சம் கோடிகளைத் தொடும்..!


இந்திய பொருளாதாரம் இன்னும் 10 ஆண்டுகளில் 300 லட்சம் கோடிகளை தொட்டு புதிய சாதனை படைக்கும் என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா கூறியுள்ளார்.
தனியார் மற்றும் துணிகர முதலீட்டு கூட்டமைப்புகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஜெயந்த் சின்கா கூறியதாவது,
‘இந்திய நிறுவனங்களில் பெருமளவு முதலீடு குவிந்து வருவதையடுத்து, ரூபாய் மதிப்பு வலுவடைந்துள்ளது. அன்னிய முதலீட்டை அதிகளவில் கவர, அரசு பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அன்னிய முதலீட்டாளர்களின் வரி தொடர்பான பிரச்னைகளுக்கு, பட்ஜெட்டில் சரியான தீர்வு காணப்படும். மேலும், சிங்கப்பூர், லண்டனை போன்று, மும்பையை சர்வதேச நிதி மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சொத்துகளை உருவாக்க விரும்புவோர், இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம்.
இதையடுத்து, 120 லட்சம் கோடி ரூபாயாக (2 லட்சம் டாலர்) உள்ள, நம் இந்திய பொருளாதாரம், அடுத்த 10 - 12 ஆண்டுகளில், 240 - 300 லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை படைக்கும்’ என்றார்.

நயன்தாராவை துறத்தி விட்டு விஜய் உடன் இணைந்த எமி..?


தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் இயக்குநர் அட்லீ. இவர் இயக்குநர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் என்பது நமக்கு தெரியும். இவர் அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார்.
இது விஜய்யின் 59-வது படமாகும். தற்போது சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் பிஸியாக நடித்து கொண்டு இருக்கிறார் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் நடித்து வருகின்றனர். இப்படம் விஜய் கேரியரில் இல்லாத அளவிற்கு பிரமாண்டமாக உருவாகி வருகிறதாம்.
இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்பு அவர் நடிக்கவில்லை ஒரு பாலிவுட் ஹீரோயின் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது ஐ படத்தில் நடித்த எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்படி அவர் நடித்தால் நயன்தாராவின் இடம் பறிப்போகும் நிலை ஏற்படலாம். ஐ படத்திலேயே பாதி ரசிகர்கள் எமி பக்கம் சாய்ந்து விட்டார்கள். விஜய்யுடன் நடித்துவிட்டால்.. சொல்லவா வேண்டும்...

வித விதமான போஸில் ஜிலு ஜிலுக்கும் ஐஸ்வர்யா, சினேகா, டாப்ஸி, சிம்பு, விஜய்..!


விக்ரம், சூர்யா, விஜய், கமல், மாதவன், மோகன்லால், நயன்தாரா, மகேஷ் பாபு, தனுஷ், அனுஷ்கா, சினேகா, ஸ்ருதி ஹாசன் உட்பட பல பிரபலங்களுடன் பணியாற்றி இருப்பவர் பிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் சீனிவாசன்.
வருடம் வருடம் பல பிரபலங்கள் காலண்டருக்காக போஸ் கொடுப்பது வழக்கம். அதன் படி இந்த வருடத்துக்கான அதாவது இவருடைய 2015 ஆம் ஆண்டுக்கான பிரபலங்கள் காலண்டருக்கு கோலிவுட் நடிகர், நடிகைகள் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளனர்.
யார் யார் அந்த பிரபலங்கள்..
சினேகா:
நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் சூப்பராக போஸ் கொடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்:
வளர்ந்து வரும் இளம் நடிகரான விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் போஸ் கொடுத்துள்ளார்.
ஆதி:
நடிகர் ஆதி கம்பிரமாக போஸ் கொடுத்துள்ளார்.
அருண் விஜய்:
என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ள அருண் விஜய் அதே கெட்டப்பில் தனது மனைவி ஆர்த்தியுடன் போஸ் கொடுத்துள்ளார்.
சிம்பு:
நடிகர் சிம்பு தாடி, மீசையுடன் மாடல் ஒருவருடன் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார்.
கௌதம் கார்த்திக்:
கௌதம் கார்த்திக் நடிகை பிரியா ஆனந்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
இவர்களை தவிர விஷ்ணு, பரத், டாப்ஸி, வேதிகா, அதர்வா ஆகியோரும் கார்த்திக் சீனிவாசனுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

என்ன கொடுமை: விதியை மீறயதுக்கு நடந்த கொடுமை…!


சட்டவிதிகளை மீறிய நபருக்கு தலையை துண்டித்து மரணதண்டனை ஐ.எஸ். தீவிரவாதிகளால் புதிய வீடியோ காட்சி வெளியீடு
ஐ.எஸ். தீவிரவாதிகள் தமது சட்டவிதிகளுக்கு அடிபணியாத நபரொருவருக்கு தம்மால் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர்.
வடகிழக்கு சிரியாவிலுள்ள அல் – ஷாடாதி நகரில் கடந்த திங்கட்கிழமை இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி மரணதண்டனை நிறைவேற்றத்தின் போது குறிப்பிட்ட நபர் உதவி கோரி கூச்சலிடுகிறார்.
இந்நிலையில் தீவிரவாதிகள் மூவர் அவரை மடக்கிப் பிடித்து இழுத்து வர நான்காவது தீவிரவாதி அவரது தலையை பற்றிப் பிடித்து வெட்டுவதற்கு வசதியாக அவரது கழுத்தை காண்பிக்கிறார்.
இதனையடுத்து அவரது தலை தயாராக வாளுடன் நின்ற தீவிரவாதியால் வெட்டித் துண்டிக்கப்படுவதை இந்த வீடியோ காட்சி வெளிப்படுத்துகிறது.

ஐயோ!!! ‘தல’, ‘தல’ ன்னு அலறும் வெறிபுடித்த ரசிகர்கள்…!


பேசி ரொம்ப நாள் ஆச்சு... எந்த Topic எடுத்தாலும்... எட்டு என்ன... ஏழரையே போட்டு காட்டுவார்... இவர்கிட்ட சினிமா மட்டும்தான் நமக்கு பேச தெரியும்... சரி அப்படியே என்னை அறிந்தால் பற்றி கேட்டு நம்ம நட்ப தூசி தட்டிகலாம்னு ஃபோன் செய்தால்...
"நீங்க தொடர்பு கொண்ட விவேக் தற்சமயம் பிசியாக மட்டுமல்ல, பசியாகவும் உள்ளார்" என்று தனது வழக்கமான பாணியில் ஆரம்பித்தார்... நீங்க சாப்பிட்டு முடிச்சு ஃபிரியா இருக்கும் போது கூப்பிடுரோம் சார் என்றேன்...
“சொல்லுங்க அட விளையாட்டுக்கு சொன்னங்க” என்று சிரித்தார்... சிரிப்பின் சுவாரஸ்யத்தில் நலம் விசாரிப்பு முடித்து... கேள்விகளை நழுவ விட்டோம்.
“ விவேக் சார் டேட்ஸ் இல்லாத நிலையில்தான் விண்ணைதாண்டி வருவாயா படத்தில் VTVகணேஷ் நடித்தார்” என்று சமிபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் கூறியுள்ளார். உங்களிடம் இதை பற்றி கூறியுள்ளாரா... அந்த படத்தை நடிக்க முடியாமல் போனது வருத்தப்பட்டதுண்டா...?
VTVகணேஷ்க்கு நல்ல பெயர் கிடைத்தது மகிழ்ச்சிதான்... ஆனால் நான் நடிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம் தான்... ஆனால், எப்போ கௌதம் என்னிடம் கேட்டார்??? ஒருவேளை நான் மறந்திருப்பேன்!!!
மின்னலே இயக்குனர் கௌதம் மேனன் இப்பொழுது ‘என்னை அறிந்தால்’ இயக்குனர் கௌதம் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள் ?
மின்னலே- கௌதம் 13 வருடம் சின்னவர்; புதியவர் பரபரப்பும், படபடப்பும் உள்ளவர்.
என்னை அறிந்தால் - கௌதம் 13 வருடம் கடந்து வந்து இருக்கிறார்; பக்குவம் வந்திருக்கிறது. அனால் அதே அன்பு. ‘AUDI’ காரில் வருகிறார்.
உங்க படங்களில் வழக்கமா வரும் COOLERS , T-shirt போட்ட HEROவின் நண்பனா இல்லாமல் என்னை அறிந்தால் படத்தில் சற்று வேற கெட்-அப்ல lively-ஆ வரிங்களே.... உங்க கதாப்பாத்திரத்தை பற்றி சொல்லுங்களேன்?
இந்த படத்தில் ஒரு சீரியசான , குசும்புமிக்க கதாப்பாத்திரம்; சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும். எடுத்த காமெடி காட்சிகளில் எத்தனை எடிட்டர் ஆண்டனியின் கத்திரிக்கு தப்பிக்கிறதோ... ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.
‘காதல் மன்னன்’ ஷிவா, ‘என்னை அறிந்தால்’ சத்யதேவ் உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பன் யார்?
ஷிவா – துடிப்பான ‘காதல்’ மன்னன்
சத்யதேவ் – பொறுப்பான ‘காவல்’ மன்னன்
இருவரும் நல்ல நண்பர்களே...
Twitter , Facebookனு அஜித் சார் ரசிகர்கள் எங்கும் உள்ளார்கள். சமூக வலைதளங்களில் அவர்களுடன் ஏற்பட்ட ஏதேனும் ஒரு அனுபவம்
ஐயோ!!! ‘தல’, ‘தல’ ன்னு அலறும் அவர்மேல் வெறிபுடித்த ரசிகர்கள். நான் என்னை அறிந்தால் நடிக்க தொடங்கியதில் இருந்து, ‘என்ன கதை ?’, ‘ தல எப்படி இருக்கார்??னு கேட்டே கொன்னுப்புட்டாங்க... பாசக்கார பசங்க...
இருவார்த்தைகளில் திரிஷாவை பற்றி கூறுங்களேன்.
இனிமை, பெண்மை – திரிஷா
அனுஷ்காவை பற்றி இருவார்த்தைகளில் கூறுங்களேன்.
அழகு, அறிவு – அனுஷ்கா
தீவிர பெரியாரின் கொள்கையை பேசிய நீங்கள்... இப்பொழுது பாபா வின் தீவிர பக்தன் மாறியுள்ளீர்களே.
பெரியாரின் சாதி ஒழிப்பு , பெண் கல்வி, மூட நம்பிக்கை போன்றவற்றை படங்களில் சொல்லி இருக்கிறேன். முரட்டுதனமான, முட்டாள் தனமான மதம் வேண்டாம் என்கிறேன் அவ்வளவுதான்.
என்னை அறிந்தால் படத்தில் உங்க Careerல் எவ்வளவு முக்கியமானதாக இருக்கும்.
ஷூட்டிங்கில் எடுத்ததெல்லாம், படத்தில் இருந்த எடுத்துவிடாமல் வைத்தால்... என் Careerல் முக்கியமான படமாய் இருக்கும்.
அஜித்தின் அன்புக்கு நன்றி...

விபசாரத்தை கண்டுபிடிக்க கவுன்சிலர்கள் போட்ட வேடம்…!


இத்தாலியை சேர்ந்த நகர மேயர் ஒருவர் சட்ட விரோத விபசாரத்தை கண்டுபிடித்து முறியடிக்க விநோத வழிமுறையைக் கையாண்டுள்ளார்.
காஸ்டெல் வொல்துர்னோ நகர மேயரான திமித்ரி ருஸோ பெண் நகர சபை உறுப்பினர்களான அனஸ்டாஸியா பெட்ரால்லா மற்றும் ஸ்டெபனியா சன்கர்மனோ ஆகியோரை விலை மாதர்கள் போன்று குட்டை பாவாடையுடன் வீதியில் நிறுத்தியுள்ளனர்.
இதன்போது அந்த போலி விலைமாதர்களை அணுகிய ஆண்களை இரகசியமாக புகைப்படமெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்படி பெண் நகர சபை உறுப்பினர்களை விலை மாதர்கள் என கருதி அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர்கள் அணுகிய போது அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றின் பின்பகுதியில் புகைப்படக் கலைஞருடன் மறைந்திருந்த நகர மேயர் அவர்களை எதிர்கொண்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
கையுங்களவுமாக பிடிக்கப்பட்ட அந்த ஓட்டுநர்கள் தமது செயலுக்காக தண்டப்பணம் செலுத்த நேர்ந்தது. இத்தாலியில் பணத்தை செலுத்தியும், பெற்றும் பாலியலில் ஈடுபடுவது சட்டவிரோதமானதாகும்.

Friday 30 January 2015

அவர் மட்டும் தானா..? நானும் தான்.. அஜித்துக்கு போட்டியாக அமீர் கான்..!


கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து ஹீரோக்களும் தங்களுக்கு வயதானாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் டை அடித்து கருப்பு முடியுடன் நடிக்கவே ஆசைப்படுவார்கள்.
ஆனால் முதல் முறையாக ஒரு முன்னணி நடிகராக இருக்கும் அஜித் நரை முடியுடன் நடிக்கத் துவங்கினார். அவரது சால்ட் அன்ட் பெப்பர் லுக் அதாவது நரைமுடி கெட்டப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
பல ரசிகர்கள் அவரை போன்று சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வலம்வர ஆரம்பித்தினர். ஒரு சில நடிகர்களும்அஜித்தை பார்த்து சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகின்றனர். அதில் புதிதாக இணைத்திருப்பவர் பாலிவுட்டின் வசூல் மன்னன் அமீர்கான்.
பிகே படத்திற்கு பிறகு அமீர் கான் நடிக்கும் புதிய படத்தில் ‘தல’ அஜித் போன்று சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வருகிறார். இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் அமீர்கான் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாம். அதனால் தான் இந்த லுக்காம்...
கலக்குங்க அமீர்கான்...

அது போன மாசம்… இது இந்த மாசம்… அமெரிக்கா அடித்த பல்டி!!?


தீவிரவாத்தை வேரோடு அழிப்போம் என்று சில ஆண்டுகளாகவே அமெரிக்கா புஷ்டி முருக்கி கொண்டு சுற்றிவருகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை அளிப்பதற்காக தன் நாட்டின் ராணுவத்தை அங்கு நிறுத்தியுள்ளது என்பது நாம் அறிந்த விஷயம் தான்.
இந்நிலையில் அமெரிக்கா வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர். “தலிபான்கள் தீவிரவாதிகள் இல்லை, அவர்கள் ஆயுதம் ஏந்திய போராளிகள். ஆனால் ஐ.எஸ் அமைப்பினர் போன்ற தீவிரவாதிகளை நாங்கள் விட மாட்டோம். அவர்களை அமெரிக்கா அழித்தே தீரும்” என்று கூறியுள்ளார்.
தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா உமரை பிடித்துக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை அறிவித்திருந்தது இதே அமெரிக்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது.