Sunday 31 May 2015

அடேங்கப்பா!!! நெஜமாதான் சொல்றியா!!?


ஹாலிவுட் படங்கள் என்றாலே அதன் வசூலைப் பற்றி கேட்கவேண்டியதில்லை. நம்ம ஊர் படங்கள் ஒரு நாளில் ரூ.10 கோடி ரூபாய் வசூலை பெரிதாக பேசும் நேரத்தில் அவர்கள் சாதரணமாக ரூ.50, 60 கோடிகளை வசூலித்து செல்வர்.
ஆனால், அப்படங்களுக்கு அவர்கள் போட்டும் பட்ஜெட் ஆனது, நம்ம ஊர் பெரிய ஹீரொக்களின் பெரிய பட்ஜெட் படங்களுக்கு 10 மடங்கு அதிகமாக இருக்கும். ஹாலிவுட்டின் ஆக்ஷன், ரொமான்ஸ், அனிமேஷன் என அனைத்து வகையான படங்களுக்கும் ரசிகர்கள் உலகமெங்கும் உண்டு. அதுவும் குறிப்பிட்ட சில படங்கள் தொடரச்சியாக வெளிவரும், அப்படிப்பட்ட படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.


அப்படியொரு படம் தான் சென்ற மாதம் (ஏப்ரல் 2) வெளியான ’ஃப்யூரியஸ்7’ படம். ’ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்’ பட வரிசையின் ஏழாவது பாகமான இப்படம் இதுவரை உலகளவில் ரூ.7000கோடிகளை வசூலித்து உள்ளது.
அதில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது இந்தப் படம்.
இப்படத்தில், மறைந்த நடிகர் பால் வாக்கர், வின் டீசல், ஜேசன் ஸ்டாதம், டுவைன் ஜான்சன், லூட கிறிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

தின பலன் 01-06-2015


தெரிந்து கொள்வோம்: இறைவனிடம் வேண்டுதல் வைப்பது தேவையா??
இறைவன் கருணையாளராக இருக்கும் போது வேண்டுதல் வைப்பது தவறு தான். இதையே மாணிக்கவாசகர், வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ என்று குறிப்பிடுகிறார். இதை உணர்ந்தவர்கள் வேண்டுதல் எதுவும் வைக்க மாட்டார்கள்.
குழந்தை அழுவதற்கு முன் பாலுõட்டும் தாயின் கருணையை, பால் நினைந்து ஊட்டும் தாயினும் என தாயையே இறைவனுக்கு உதாரணப்படுத்துகின்ற அளவுக்கு அவர் பெருமைப்படுகிறார்.
ஆனால், குழந்தைகள் இது புரியாமல் அழுகின்றன. அழத்தேவையில்லை. நாம் கேட்காமலேயே இறைவன் தருவான் என்ற உணர்வு வரும் வரை, வேண்டுதல் என்பது இருக்கும்.
இறையருளால் மனம் பக்குவப்படும் போது மாணிக்கவாசகரின் திருவாசகம் சாத்தியமாகி விடும்.
ராசிகளுக்கான இன்றைய தின பலன் 
மேஷம் - பிரமை
ரிஷபம் - ஊக்கம்
மிதுனம் - ஆர்வம்
கடகம் - பயம்
சிம்மம் - பிரிவு
கன்னி - தடை
துலாம் - ஏமாற்றம்
விர்ச்சிகம் - செலவு
தனுசு - பக்தி
மகரம் - உயர்வு
கும்பம் - முயற்சி
மீனம் - பாராட்டு

இன்றைய தினம்..!!(ஜூன் 1)


ஜூன் 1
மர்லின் மன்றோ பிறந்த தினம்!!
1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ. உலக இளைஞர்களின் காமத்தின் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம், இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது. ஒன்றரை மில்லியன் டாலருக்கு கால் மணி நேர படமே இதற்கு சான்று.
மர்லினின் அபிரிதமான அழகும், பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும், 36 வயதில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை, ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது. மர்லின் மன்றோ பிறக்கும்போது அவரது தாயார் கிளாடிஸ் மன்றோ பேக்கர் தனது முதல் கணவர் ஜாஸ்பர் பேக்கரை பிரிந்து எட்வர்ட் மார்டின்சன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். மர்லினின் தந்தை யார் என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது.
அப்பாவை தேடிய நீண்ட பயணமாக மர்லினின் வாழ்க்கையை எளிமையாகக் கூறலாம். அப்பா என்ற உறவு வாழ்க்கையில் ஏற்படுத்திய வெற்றிடம் மர்லினுக்கு இறுதிவரை ஒரு அலைக்கழிப்பாக தொடர்ந்தது. அறுபது வயதான ஆர்தர் மில்லரோடு மர்லின் உடல் ரீதியான உறவு வைத்துக் கொண்டிருந்தாலும் அவரை டாடி என்றே அழைத்து வந்ததை இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மர்லினின் இளமைப் பருவம் கொடியது.
பிறந்த பன்னிரெண்டாவது நாளே வறுமை காரணமாக வளர்ப்பு பெற்றோர்களிடம் அவள் தாரை வார்க்கப்பட்டாள். பதினாறு வயது வரை வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு வளர்ப்பு பெற்றோர்கள் என அனாதைத்தனமான வாழ்க்கை. இடையில் மர்லினின் தாயார் மனச்சிதைவுக்கு உள்ளாகி மனநல காப்பாகத்தில் சேர்க்கப்பட, அவள், தான் ஒருபோதும் விரும்பாத அனாதை வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
16 வயதில் நடந்த மர்லினின் முதல் திருமணமும் மகிழ்ச்சியானதாக இல்லை. வளர்ப்பு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசர திருமணம் அது. 1944-ல் மர்லினின் வாழ்க்கை புதிய மாறுதலுக்குள்ளானது. டேவிட் கொனோவர் என்ற புகைப்படக் கலைஞர் Yank பத்திரிக்கைக்காக மர்லினை சில புகைப்படங்கள் எடுத்தார். மர்லினின் அபிரிதமான அழகை முதலில் கண்டுணர்ந்தவர் கொனோவரே.
1947 ஆம் ஆண்டில் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய பாத்திரங்களில் தோன்றினார். 1950 இல் The Asphalt Jungle மற்றும் All About Eve என்ற படங்கள் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்குக் கிடைத்தது. வெற்றிகரமான நடிகையாக திகழ்ந்தாலும், மன்றோவின் கடைசி நாட்களில் போதைப் பொருள், குடும்பப் பிரச்சினையால் பிரச்சனைகளுக்கு உள்ளானார். ஆகஸ்டு 5, 1962ஆம் ஆண்டு இவர் தற்கொலை செய்து கொண்டார்.
இவரது இறப்பு இன்னமும் ஒரு தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது. தற்கொலை செய்து கொண்டதாகவே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு இறந்திருக்கலாம் என்ற கருத்தும் மறுக்கப்படவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1869 - மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை எடிசன் பெற்றார்.
1971 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1980 - சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.
சிறப்பு நாள்:
பன்னாட்டு குழந்தைகள் தினம்.

Saturday 30 May 2015

புதுமையான முறையில் உருவாகும் “ துடி “


மைன்டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக ரிதுன் சாகர், G.லஷ்மி இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ துடி “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அபிநயா நாயகியாக நடிக்கிறார். மற்றும் சுமன், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ், நளினி, மற்றும் இன்னொரு நாயகியாக பிரேர்னா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்கிறார்.
கமலா தியேட்டரின் அதிபர் சிதம்பரத்தின் மகன் கணேஷ் அமைச்சர் வேடத்தில் நடிக்கிறார். எழுதி இயக்குபவர் - ரிதுன் சாகர். இவர் யாரிடமும் உதவியாளராக பணியாற்ற வில்லை விஷுவல் படித்து விட்டு நிறைய குறும்படங்கள் இயக்கி இருக்கிறார். அந்த அனுபவத்தை கொண்டு விறுவிறுப்பான கதையை உருவாக்கி “ துடி “ என்று பெயரிட்டுள்ளார்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.... ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் டெரரிஸ்ட் அட்டாக் தான் கதை ! மாலை 6 மணிக்கு துவங்கி காலை 6 மணிக்குள் நடக்கும் சம்பவங்கள் தான் கதை! அந்த காலகட்டத்தில் உருவான மிஸ் கம்யூனிகேசன் தான் கதையின் மையக்கரு. அபிநயா ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் ஆக நடிக்கிறார். படம் ஆரம்பித்தவுடன் சீட் நுனிக்கு வரும் ரசிகன் முடியும் வரை அதே மன நிலையில் இருப்பதுதான் திரைக்கதையின் முக்கிய அம்சம்.
இதற்காக சென்னையில் பைவ் ஸ்டார் ஹோட்டலின் இண்டீரியர் அரங்குகளாக அமைக்கப் பட உள்ளது. சென்னை, ஹைதராபாத், மூணார் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார் ரிதுன் சாகர்.

Green tea prevent prostate cancer!!


A new study has revealed that risk of prostate cancer can be reduced by consuming green tea. A research team led by Nagi B. Kumar of the Moffitt Cancer Center analyzed nearly 100 men for the study.
The team wanted to find out whether green tea catechins could suppress prostate cancer development in men who had high-grade intraepithelial neoplasia (HGPIN) or atypical small acinar proliferation (ASAP).
The team used green tea capsules that contained a mixture of catechins. It mainly contained Epigallocatechin-3-gallate (EGCG), which is most abundant and potent catechin responsible for these cancer prevention effects. It is taken at a dose of 200 mgs twice a day.
The researchers divided the participants into two groups and gave capsules predominantly containing EGCG to one group and placebo to another.
After comparing the two groups, the team found that an active component , ‘catechins’ found in decaffeinated green tea prevented prostate cancer development in men who have premalignant lesions.
The team compared Polyphenon E in 49 men to the group consisting of 48 men with placebo tablets over a 1-year treatment period. They observed a lower combined rate of ASAP and prostate cancer development with Polyophenon E.
Prostate cancer is the second most common type of cancer in men. It is diagnosed in an estimated 80% of men who reach age 80.
Green tea has long been studied for its health benefits. Two research papers explained how green tea may help reduce the risk of developing some cancers.
Twenty percent of green tea is consumed in Asian countries where prostate cancer death rates are among the lowest in the world.
It has been also found that risk of prostate cancer increased among Asian men who abandon their original dietary habits upon migrating to the US.

பேய் இருக்குதா இல்லையா..?? “பேய்கள் ஜாக்கிரதை”


இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குனராகவும், தெலுங்கு படவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “பீருவா” உள்ளிட்ட பல படங்களைஇயக்கிய கண்மணி முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.
பேய்கள் ஜாக்கிரதை எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர் இவ்வுலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், பேய்கள் உள்ளது என்று கூறுபவன் மூடன் என்று கூறும் ஒரு கதாபாத்திரமும்ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்கிறது. இவ்விருவரையும் இணைக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடைபெறுகிறது.
அந்த சம்பவம் எதனால் நடைபெறுகிறது. சம்பவத்திற்கு பின் அவர்கள் படும்குழப்பங்களை நகைச்சுவை பிண்ணனியுடன் கலந்து கூறியிருக்கும் படமே “பேய்கள் ஜாக்கிரதை” ஸ்ரீ சாய் சர்வேஷ் எண்டர்டைன்மெண்ட் சார்பாக ஜி.ராகவன் அவர்கள் இப்படத்தை தயாரிக்கின்றார். இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றபுறங்களில் நடைபெறுகிறது.

kakka muttai to have a huge release in International Markets


After bagging two national awards and getting standing ovations at various international film festivals, Kaakka Muttai is gearing to take yet another leap forward! The film is all set to charm its audience across the globe in a BIG way.
The film has been getting a great response from distributors not only in Tamil Nadu but across the World. Fox Star Studios has managed to sell the film for some never-heard before prices in nontraditional markets like Japan & South Korea, apart from the traditional markets.
For the first time ever, a film is going to see a 100+ screens release in markets such as Japan & South Korea. Fox will be giving the widest ever release for any non-superstar Tamil film Internationally.
In India, and few traditional markets like Malaysia, Singapore, the film will be released on 5th June, while the film will release in the other countries including Europe, Australia, etc across this year.