Wednesday 27 May 2015

முகப்பரு ஏன் வருது தெரியுமா??


ஆண்களோ, பெண்களோ இளம் வயதில் அவர்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை முகப்பரு.
அதனை போக்க என்னென்னமோ செய்து பார்ப்பார்கள். ஆனால், அது ஏன் வருகிறது என்று யோசிப்பதே இல்லை. முகப்பரு வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குத் தான் பருக்கள் அதிகம் வரும். ஏனெனில் அவர்களின் முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பதால், தூசிகள் சருமத்தில் படிந்து, சரும துளைகளை அடைத்து, அதனால் பருக்களை ஏற்படுத்தும்.
இவர்கள் தினமும் மூன்று முறை ரோஸ்வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுப்பதுடன், மைல்டு ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். மேலும் தினமும் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி உலர வைத்து கழுவி வாருங்கள். இதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை கட்டுப்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்: முகப்பரு தீர்வு தான் என்ன??

சிலருக்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொண்டாலும் முகப்பருக்கள் வரக்கூடும்.
இவர்கள் எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, தினமும் 4-5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், பழங்களை அதிகளவில் உண்டு வர வேண்டும்.
சிலர் ஃபேஷ் வாஷ் அல்லது ஃபேஷ் க்ரீம்மை மாற்றியிருப்பார்கள். அப்படி மாற்றிய க்ரீம்மானது, சருமத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் இருக்கும். அவ்வாறு சருமத்திற்கு பொருத்தமற்றதை பயன்படுத்தினால், அவை பருக்களை உண்டாக்கும்.
தலையில் பொடுகு அதிகம் இருந்தால், அந்த பொடுகு முகத்தில் பட்டு பருக்களை ஏற்படுத்தும். எனவே பருக்கள் வருவதை தவிர்க்க வேண்டுமானால், முதலில் தலையை சுத்தமாக பொடுகின்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment