Saturday 30 May 2015

ரகசிய கடிதத்தால் அஜித் படத்திற்கு சிக்கல்... அதிர்ச்சியில் படக்குழு..!


நடிகர் அஜித் தற்போது ‘வீரம்’ சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே..
அஜித்தின் 56-வது படமான இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க அஜித்தின் தங்கையாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு முதன் முறையாக அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைப்பெற்றது. இதில் அஜித்லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது கோடையை முன்னிட்டு படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் படக்குழுனர்.
இப்படத்தில் டாக்சி டிரைவராக வரும் அஜித் முதலில் சாந்தமாக வருவது போன்றும், ப்ளாஷ்பேக்கில் மாஸாக வருவது போலவும் கதைகள் அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.
பாட்ஷா படத்தில் ரஜினி இதேபோன்று தான் முதலில் ஆட்டோ டிரைவர் போன்று சாந்தமாக இருப்பார். ப்ளாஷ் பேக்கில் மாஸாக மாறுவார். இதனால் பாட்ஷா படத்தின் காப்பி தான் ‘தல 56’ படம் என்ற ஒரு பேச்சு கோலிவுட்டில் அடிப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட யாரும் இதுவரை வாய்திறக்கவில்லை.
இந்நிலையில் அஜித் படம் தயாரிக்கும் ஏ.எம்.ரத்னம் அலுவலகத்துக்கு நிறைய கடிதங்கள் வருகிறதாம்.அஜித் படம் எப்போது வெளியாகும் என்று கேட்டுதான் நிறைய கடிதங்கள் வருகின்றன. அவற்றில் ஒரு கடிதம் எச்சரிக்கை கடிதமாக இருந்ததாம். அதில் ‘உங்களுடைய படத்தின் கதை அப்படியே எங்கள் படமான பாட்ஷா படத்தின் கதை என்று கூறுகிறார்கள், இதற்கு முறைப்படி நீங்கள் எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும்.
அனுமதி இல்லாமல் பாட்ஷா பாணியிலான கதையை எடுத்தால் சட்ட ரீதியான பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும்’ என்று அந்த கடிதத்தில் இருந்ததாம். சத்யாமூவிஸ்தான் பாட்ஷா படத்தை தயாரித்தது. அந்த நிறுவனம் சார்பில்தான் இக்கடிதம் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அஜித் பட தயாரிப்பாளர் தரப்பு,’அஜீத் படம் பாட்ஷா 2ம் பாகம் இல்லை. முற்றிலும் புதிய கதை’ என்கிறது.

No comments:

Post a Comment