Thursday 30 April 2015

தின பலன் 01-05-2015


தெரிந்து கொள்வோம்: கருவறையில் கற்பூர ஆரத்தி எதற்காக??
பழங்காலத்தில் கடவுள் அமைந்திருக்கும், கருவறை முற்றிலும் இருட்டாக இருக்கும். இன்று இருப்பது போல், மின்விளக்கு வசதிகள் இல்லாததால் கோவில் முழுவது இருட்டாகவே இருந்தது.
இதனால், கருவறையில் இருக்கும் கடவுளை மக்கள் தெளிவாகக் காண முடியாது. எனவே, கடவுளை மக்கள் காண்பதற்காக, கற்பூரம் அல்லது நெய்தீபம் ஏற்றப்பட்டு கடவுளின் முகம், கரங்கள் என உருவம் முழுவதும் ஆரத்தியாகக் காண்பிக்கப்பட்டது.
இதற்கு ஒரு தத்துவ விளக்கமும் உண்டு. மனத்திலுள்ள இருட்டு, அதாவது அஞ்ஞானம், விலக இறை அருள் தேவை. ஆரத்தியில் காட்டும் தீபம் எப்படி கர்ப்பக்கிரக இருளைப் போக்குகிறதோ அதுபோல, நம் அகத்தில் உள்ள இருளும் இறை வழிபாட்டில் மறைந்து விடும்.
கற்பூரத்திற்கு பதில் நெய் தீபம் ஏற்றப்படுவதும் உண்டு. இதில், கற்பூரத்துக்கும் நெய் தீபத்துக்கும் வேறுபாடு உண்டு. கற்பூரம் என்பது ஒரு விநோதமான ஹைட்ரோகார்பன் பொருள். இதை எரிக்கும்போது பதங்கமாதல் (சப்ளிமேஷன் ) என்னும் முறையில் எரிகிறது.
அதாவது அந்தப் பொருளை சூடு படுத்தும்போது திட நிலையில் இருந்து திரவ நிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்குப் போய்விடும். இதே போல கற்பூரம் போல வெள்ளை உள்ளம், தூய உள்ளம் உடையோர், இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதையும் கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்
மேஷம் - யோகம்
ரிஷபம் - பெருமை
மிதுனம் - மேன்மை
கடகம் - சோதனை
சிம்மம் - சிரமம்
கன்னி - நிம்மதி
துலாம் - அமைதி
விருச்சிகம் - கவணம்
தனுசு - பரிவு
மகரம் - பக்தி
கும்பம் - வெற்றி
மீனம் - நன்மை

No comments:

Post a Comment