Friday 27 February 2015

Whats App கும்பல் கற்பழிப்பு விவகாரம்… வழக்கு நடத்த சிபிஐக்கு உத்தரவு!!


சுப்ரீம் கோர்ட் நேற்று வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோ குறித்து கேள்வி எழுப்பி அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஒரு பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ ஒன்று பரவியது. எனினும் இது குறித்து யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை.
சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு வந்த இந்த வீடியோ வர, இது குறித்து வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யவும், சம்பந்த பட்டவர்களை விரைவில் கைது செய்யவும் உத்தரவிட்டது.
மேலும், இந்த வீடியோவினை, உத்திரப் பிரதேசம், பீகார், ஒடிசா மற்றும் டெல்லி அரசுகளும் அந்த வீடியோவினை பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அவர்கள், தவறு செய்கின்றோம் என்ற நினைப்பு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இன்றி சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நிச்சயம் தண்டிக்கப் படவேண்டியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment