Saturday 28 February 2015

காப்புரிமை மோசடி!! ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.3,366 கோடி அபராதம்!!?


பிரபல ஆப்பிள் நிறுவனத்திற்கு காப்புரிமை மோசடி செய்ததற்காக அமெரிக்க நீதிமன்றம், ரூ.3,366 கோடி அபராதம் விதித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஸ்மார்ட்பிளேஸ் என்ற நிறுவனம், குறிப்பிட்ட சில தொழில்நுட்பங்கள் எங்களது நிறுவன அதிகரியிடம் இருந்து தெரிந்து கொண்டு ஆப்பிள் முறையான அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளனர் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், ஸ்மார்ட்பிளேஸ் நிறுவனம் ரூ.5,282 கோடி இழப்பீடு கேட்டிருந்தது. ஆனால் வழக்கினை விசாரித்த நீதிபதி ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ. 3,366 கோடிகள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் ஆப்பிள் நிறுவனம், அபராதத் தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி கட்ட மறுத்து விட்டது. மேலும், ‘ஸ்மார்ட்பிளேஸ் நிறுவனம் ஏன் முதலிலேயே வழக்கு தொடரவில்லை’ என்று கேள்வி எழுப்பி மீண்டும் அப்பீல் செய்துள்ளது.

No comments:

Post a Comment