Saturday 28 February 2015

தனுஷ் படத்தில போய் தெரியாம நடிச்சிட்டோமே.. குமுறும் ஐஸ்வர்யா..!


அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இடம்பொருள் ஏவல், குற்றமும் தண்டனையும், தீபாவளி துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
முன்பைவிட இளமையாகவும், அழகாகவும் இருக்கும் இவர் தனுஷ் தயாரித்துள்ள படத்தில் ஏண்டா நடித்தோம் என்று கலங்கி வருகிறாராம். காரணம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பே தனுஷும், வெற்றிமாறனும் இணைந்து தயாரிக்கும் காக்கா முட்டை படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் அவருக்கு 30 வயது மதிக்கத்தக்க சேரி பெண் வேடமாம். அதனால் தனது உடல் எடையை பெருக்க வைத்ததோடு, முக அழகையும் அழுக்குப்படுத்திதான் நடித்தாராம். அந்த சமயத்தில் சரியான படங்கள் கைவசம் இல்லாததால் தேடிவந்த வாய்ப்பை விட வேண்டாம் என்று அந்த படத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா.
ஆனால், தற்போது அவர் கதாநாயகியாக நடித்த படங்கள் வெளிவந்து அவருக்கென ஒரு இமேஜை உருவாக்கி விட்டன. அதனால், தான் 30 வயது பெண்ணாக கேரக்டர் ரோலில் நடித்திருக்கும் காக்கா முட்டை படம் வெளிவந்தால் தனது ஹீரோயின் இமேஜ்க்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று மனதளவில குமுறி வருகிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.

No comments:

Post a Comment