Tuesday 24 February 2015

மீண்டும் தப்பு தப்பாக எழுதுகிறார்கள்..?


லிங்கா பிரச்சினை தொடர்ப்பாக நாளுக்கு நாள் சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் லிங்கா நஷ்ட ஈடு பிரச்சினையில் ரஜினி தலையிட வேண்டும் என்றும் இல்லையென்றால் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு மெகா பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த போவதாகவும் மிரட்டல் விடுத்தனர் விநியோகஸ்தர்கள். இதனால் பிரச்சினை பெரிய அளவில் சூடு பிடித்தது.
கூடவே, ரஜினிக்கு ஆதரவாக களமிறங்க அவரது ரசிகர்களும் தயார் நிலையில் இருந்தார்கள். இந்த நிலையில்தான் இரண்டு பிரபல நடிகர்கள்தான் ரஜினியை நஷ்ட ஈடு கொடுக்க கூடாது என தடுக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியானது. அந்த இரண்டு நடிகர்கள் விஜய், சரத்குமார் என்ற ஒரு பேச்சும் அடிப்பட்டது.
இது குறித்து விஜய் தரப்பினர் "விஜய்க்கும் 'லிங்கா' பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை" என்று மறுத்தார்கள். இந்நிலையில் தான் திடீரென சிங்காரவேலனும் விஜய்யும் சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து விஜய் தான் விநியோகஸ்தர்கள் பின்னணியில் இருக்கிறார் என்று தகவல் வெளியானது. இதனால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த புகைப்படம் குறித்தும், விஜய் இதில் சம்பந்தப்பட்டிருக்காரா..? என்பது குறித்தும் சிங்காரவேலனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "நான் விஜய் சாரை சந்தித்து உண்மை தான். ஏனென்றால் நாங்கள் எந்தொரு இடத்திலும் விஜய் சாரின் பெயரை உபயோகிக்கவில்லை. ஆனால், விஜய்யை லிங்கா பிரச்சினையில் முன்னிறுத்தி செய்திகளை வெளியிட்டார்கள். இதனால் விஜய் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறார் என்று அவரது செய்தி தொடர்பாளர் என்னிடம் தெரிவித்தார்.
உடனே, அவரை நேரில் சந்தித்து இதனை விளக்குவதாகவும் தெரிவித்தேன். அதற்கு 'புலி' படப்பிடிப்பு தளத்துக்கு வருமாறு கூறினார்கள், சென்றேன். அன்று தான் விஜய் 'புலி' குழுவினருக்கு விருந்தளித்தார். விஜய்யிடம் நாங்கள் எந்தொரு இடத்திலும் உங்களுக்கு பெயரை உபயோகப்படுத்தவில்லை.
ஆனால், தவறான செய்திகளை வெளிவந்துவிட்டது என்று அவரிடம் கூறினேன். அவரும் சரி... பரவாயில்லை என்று கூறினார். விநியோகஸ்தர்களுக்கு மினிமம் கேரன்டி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய் மட்டுமே. அவரை முதன்முதலாக சந்தித்ததால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அப்படத்தை என்னுடைய வாட்ஸ்-அப் படமாக வைத்தது தவறு. அதை வைத்துக் கொண்டு மீண்டும் தவறாக எழுதுகிறார்கள்" என்றார் சிங்காரவேலன்.

No comments:

Post a Comment