Wednesday 25 February 2015

பல தள்ளுமுள்ளுக்கு பிறகு மீண்டும் உதயமாகிறது..!


எந்த பின்புலமும் இல்லாமல் மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து கடுமையாக உழைத்து கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் உயர்ந்த இடத்துக்கு வந்த அவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
அதில் ஒன்று தான் ’வசந்தகுமாரன்’. இந்தப் படம் ஒரு சில பிரச்சினைகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ‘ஸ்டுடியோ 9’ தயாரிக்கும் இந்தப்படம் கைவிடப்பட்டதாக அறிவித்தார் விஜய்சேதுபதி. தயாரிப்பு நிறுவனத்திற்கும், தனக்கும் இடையே இருந்த சில கருத்த வேறுபாடுகள் காரணமாகவே இந்த முடிவை, தான் எடுத்ததாக அப்போது தெரிவித்தார்.
அதே நேரம் ‘ஸ்டியோ 9’ சுரேஷும், விஜய் சேதுபதியால் தனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், இதனால் கம்பெனியை முடக்கும் எண்ணத்தில் தான் இருப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அப்போது இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த பரபரப்பு அப்படியே காணாமல் போய்விட்டது.
இந்நிலையில் தற்போது கதையிலும், விஜய்சேதுபதியின் கேரக்டரிலும் சிறு சிறு மாற்றங்கள் செய்து மீண்டும் ‘வசந்தகுமாரன்’ படத்தைத் தொடங்கலாம் என விஜய்சேதுபதியும், தயாரிப்பாளரும் முடிவு செய்திருப்பதாகவும், மார்ச் அல்லது ஏப்ரலில் படப்பிடிப்பைத் துவங்கவிருப்பதாகவும் செய்திகள் கிடைத்திருக்கின்றன.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment