Friday 5 June 2015

உணவு சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத சில விஷயங்கள்..


சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருப்பதை நாம் கேட்டு இருப்போம். ஆனால் அதை மதிக்க மாட்டோம். நம் முன்னோர்கள் சொன்ன ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா..?
நம் சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது. காரணம் வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.
அதேபோல் தேநீர் அருந்த கூடாது.  தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும். பொதுவாக சாப்பிட்ட பின் ஆண்களுக்கு சிகரெட் பிடிப்பது ஒரு பழக்கமாக இருக்கிறது.
நாம் உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
ஒரு சிலர் சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.
சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது. ஏனென்றால் சாப்பிட்ட பிறகு நாம் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது. நாம் சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.
நம்மில் முக்கால் வாசி மக்கள் சாப்பிட்ட உடன் தூக்கும் பழக்கத்தை உடையவர்கள்.சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

No comments:

Post a Comment